மேட்டுப்பாளையத்தில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது; ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை: மேட்டுப்பாளையம் அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

கோவை: மேட்டுப்பாளையம் அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை பகுதியில் ஐந்திற்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், காரமடை பகுதியில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து சிலர் தினசரி கஞ்சா பொட்டலங்கள் விற்று வருவதாக காரமடை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.



இதையடுத்து தகவலின் பேரில் காரமடை போலீசார், காரமடை முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒன்னிபாளையம் பிரிவு அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா பொட்டலம் விற்று வருவதாக தகவல் கிடைத்ததையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், சத்தியமங்கலத்தை சேர்ந்த பழனிச்சாமி மகன் ஆனந்த் (27) என்பவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில், கடந்த ஓராண்டிற்கும் மேலாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இவரது தந்தையும் சத்தியமங்கலம் பகுதியில் கஞ்சா விற்று வந்ததும், அவர் தற்போது சிறையில் இருப்பதாகவும் தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காரமடை காவல்துறையினர் ஆனந்த்தை கைது செய்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...