கோவை: கோவை மாநகராட்சி மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு திமுக சார்பில் போட்டியிட இதுவரை 750 பேர் விருப்ப மனு பெற்றுள்ளனர்.
கோவை: கோவை மாநகராட்சி மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு திமுக சார்பில் போட்டியிட இதுவரை 750 பேர் விருப்ப மனு பெற்றுள்ளனர்.
கடந்த 2011ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் பதவிக்காலம் 2016ல் முடிவடைந்து. இதனை தொடர்ந்து 2016ல் நடைபெற வேண்டிய தேர்தல் கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. இது தொடர்பாக வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்த முழு வீச்சில் தயாராகி வருகிறது. விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபே என எதிர்பார்ப்புகள் உள்ளதால் அரசியல் கட்சியினர் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களின் விருப்ப மனுக்களை நா.கார்த்திக் எம்எல்ஏ வழங்கினார். காலை 11 மணி நிலவரப்படி 750 பேர் விண்ணப்பங்கள் பெற்று உள்ளனர். விருப்ப மனுக்கள் கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று முதல் வழங்கப்படுகின்றது.

இந்த விருப்ப மனு நிகழ்ச்சியில், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, உமா மகேஸ்வரி, பகுதி கழக செயலாளர் எஸ்.எம்.சாமி, பகுதி கழக பொறுப்பாளர்கள் சேதுராமன், பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மகுடபதி, அணி அமைப்பாளர்கள் கோட்டை அப்பாஸ், ரகுமான், இராமமூர்த்தி, தீர்மான குழு மு.ரா.செல்வராஜ், மாரிசெல்வம், வழக்கறிஞர்கள் அன்புச்செழியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதே போல் மதிமுக சார்பாக போட்டியிட விரும்புவர்களிடம் மனுக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அளிக்கபட்டு இருந்தது. அந்த மனுக்களை இன்று சித்தாபுதூர் பகுதியில் உள்ள மதிமுக அலுவலகத்தில் பெறபட்டு வருகிறது.
கடந்த 2011ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் பதவிக்காலம் 2016ல் முடிவடைந்து. இதனை தொடர்ந்து 2016ல் நடைபெற வேண்டிய தேர்தல் கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. இது தொடர்பாக வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்த முழு வீச்சில் தயாராகி வருகிறது. விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபே என எதிர்பார்ப்புகள் உள்ளதால் அரசியல் கட்சியினர் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களின் விருப்ப மனுக்களை நா.கார்த்திக் எம்எல்ஏ வழங்கினார். காலை 11 மணி நிலவரப்படி 750 பேர் விண்ணப்பங்கள் பெற்று உள்ளனர். விருப்ப மனுக்கள் கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று முதல் வழங்கப்படுகின்றது.

இந்த விருப்ப மனு நிகழ்ச்சியில், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, உமா மகேஸ்வரி, பகுதி கழக செயலாளர் எஸ்.எம்.சாமி, பகுதி கழக பொறுப்பாளர்கள் சேதுராமன், பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மகுடபதி, அணி அமைப்பாளர்கள் கோட்டை அப்பாஸ், ரகுமான், இராமமூர்த்தி, தீர்மான குழு மு.ரா.செல்வராஜ், மாரிசெல்வம், வழக்கறிஞர்கள் அன்புச்செழியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதே போல் மதிமுக சார்பாக போட்டியிட விரும்புவர்களிடம் மனுக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அளிக்கபட்டு இருந்தது. அந்த மனுக்களை இன்று சித்தாபுதூர் பகுதியில் உள்ள மதிமுக அலுவலகத்தில் பெறபட்டு வருகிறது.