மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமிகள் உள்பட 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே ஓச்சேரி காலனியில் 300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த சில தினங்களாக அடிக்கடி காய்ச்சல் ஏற்பட்டு அவதிப்பட்டனர். இன்று காலை இப்பகுதியை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் உள்பட 13 பேர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். உடனடியாக இவர்கள் அனைவரும் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஒச்சேரி பகுதி மக்கள் கூறியதாவது: ஓச்சேரி காலனியில் உள்ள 2 தெருக்களில் உள்ள குடிநீர் குழாய்களையொட்டி கழிவுநீர் கால்வாய் செல்வதால் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் நிலையுள்ளது.
இதை குடித்தவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம். மதுராந்தகம் நகராட்சி அலுவலர்கள் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதாரத்துறை அதிகாரிகளும் சுகாதார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உரிய சிகிச்சை அளிக்க மருத்துவதுறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பூனிமாங்காடு அருகே வெங்கடாபுரத்தை சேர்ந்த கோவர்த்தனின் மகள் லதாஞ்சலி (16). இவர் மர்ம காய்ச்சல் பாதிக்கப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி லதாஞ்சலி பரிதாபமாக இறந்தார். சென்னை பொழிச்சலூர் லட்சுமிநகர் கண்ணகி தெருவை சேர்ந்த முகமதுஇத்திரீஸ் என்பவரின் 2 குழந்தைகள் பாஹீமா (8), முகமது (4) ஆகியோரும் மதுரவாயல் ஆலப்பாக்கம் கார்த்திகேயன் நகரை சேர்ந்த ஆரோக்கிய சாமியின் மகள் லட்சிகா ஏஞ்சல் (6) ஆகியோரும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் 3 பேரும் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து ஒச்சேரி பகுதி மக்கள் கூறியதாவது: ஓச்சேரி காலனியில் உள்ள 2 தெருக்களில் உள்ள குடிநீர் குழாய்களையொட்டி கழிவுநீர் கால்வாய் செல்வதால் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் நிலையுள்ளது.
இதை குடித்தவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம். மதுராந்தகம் நகராட்சி அலுவலர்கள் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதாரத்துறை அதிகாரிகளும் சுகாதார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உரிய சிகிச்சை அளிக்க மருத்துவதுறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பூனிமாங்காடு அருகே வெங்கடாபுரத்தை சேர்ந்த கோவர்த்தனின் மகள் லதாஞ்சலி (16). இவர் மர்ம காய்ச்சல் பாதிக்கப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி லதாஞ்சலி பரிதாபமாக இறந்தார். சென்னை பொழிச்சலூர் லட்சுமிநகர் கண்ணகி தெருவை சேர்ந்த முகமதுஇத்திரீஸ் என்பவரின் 2 குழந்தைகள் பாஹீமா (8), முகமது (4) ஆகியோரும் மதுரவாயல் ஆலப்பாக்கம் கார்த்திகேயன் நகரை சேர்ந்த ஆரோக்கிய சாமியின் மகள் லட்சிகா ஏஞ்சல் (6) ஆகியோரும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் 3 பேரும் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தனர்.