நீலகிரி: உதகையில் இரவு முழுவதும் பெய்த தொடர் மழைக்குக் காந்தள் பகுதியில் 60க்கும் மேற்பட்ட வீடுகளில் கழிவு நீர் புகுந்தது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் அளித்தும் அதிகாரிகள் வராத காரணத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் உதகை காந்தள் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நீலகிரி: உதகையில் இரவு முழுவதும் பெய்த தொடர் மழைக்குக் காந்தள் பகுதியில் 60க்கும் மேற்பட்ட வீடுகளில் கழிவு நீர் புகுந்தது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் அளித்தும் அதிகாரிகள் வராத காரணத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் உதகை காந்தள் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் நேற்று இரவு விடிய விடிய பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் கடும் குளிரில் தங்களது குழந்தைகளுடன் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
குறிப்பாக காந்தள் பகுதியில் 60க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வந்ததால், அதை சுத்தம் செய்ய உதகை நகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை தொலைபேசியில் தகவல் அளித்தும் பாதிக்கப்பட்ட பகுதிக்கு வராததால் உதகை நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கிராமப்புறங்களில் இருந்து உதகைக்கு வர வேண்டிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு தாமதமாக வந்த அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதியை உடனடியாக சரி செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
நீலகிரி மாவட்டம் உதகையில் நேற்று இரவு விடிய விடிய பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் கடும் குளிரில் தங்களது குழந்தைகளுடன் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
குறிப்பாக காந்தள் பகுதியில் 60க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வந்ததால், அதை சுத்தம் செய்ய உதகை நகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை தொலைபேசியில் தகவல் அளித்தும் பாதிக்கப்பட்ட பகுதிக்கு வராததால் உதகை நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கிராமப்புறங்களில் இருந்து உதகைக்கு வர வேண்டிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு தாமதமாக வந்த அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதியை உடனடியாக சரி செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.