சோகத்தில் முடித்த தாய் யானையின் பாசப்போராட்டம்; 8 மாத குட்டி யானை உயிரிழப்பு

கோவை: வால்பாறையில் காலில் ஊனம் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த 8 மாத குட்டி யானையின் அருகிலேயே அதன் தாய் யானையும் நின்று கொண்டிருந்ததால், வனத்துறையினர் சிகிச்சை அளிக்க முடியாததால் குட்டி யானை பரிதாபமாக பலியானது.


கோவை: வால்பாறையில் காலில் ஊனம் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த 8 மாத குட்டி யானையின் அருகிலேயே அதன் தாய் யானையும் நின்று கொண்டிருந்ததால், வனத்துறையினர் சிகிச்சை அளிக்க முடியாததால் குட்டி யானை பரிதாபமாக பலியானது.

கோவை மாவட்டம் வால்பாறை தாய்முடி எஸ்டேட் பகுதிக்கு யானைகள் கூட்டமாக வந்துள்ளது. இதில் ஒரு தாய் யானையுடன் வந்த அதன் 8 மாத குட்டி யானைக்கு காலில் ஊனம் ஏற்பட்டு அதே பகுதியில் கடந்த நான்கு வாரமாக மிகவும் அவதிப்பட்டு வந்தது.

குட்டி யானைக்கு காலில் கட்டி இருந்ததால் உணவு தேட முடியாமல் சோர்வடைந்து தொழிலாளர்களின் குடியிருப்புக்கு அருகிலேயே நின்று கொண்டிருந்தது. தாய் யானையும் குட்டியை பிரிய முடியாமல் அங்கேயே முகாமிட்டிருந்தது.

இதனால் குட்டி யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளிக்க முடியாமல் காட்டு யானையை கண்காணித்து வந்தனர். 



இந்நிலையில் இன்று குட்டி யானை இறந்தது தெரிய வந்தது. பின்னர், 10க்கும் மேற்பட்ட வனத்துறையினர் வாகனம் மூலம் தாய் யானையை விரட்டிய பின், வனச்சரகர் நடராஜன், வனவர் ஆனந்தன் கால்நடை மருத்துவர் மெய்யரசன் முன்னிலையில் யானை குட்டியின் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆழமான குழி வெட்டப்பட்டு குட்டி யானை புதைக்கப்பட்டது. கடந்த ஒரு மாதகாலமாக போராடி வந்த யானை குட்டி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....