அதிமுக.கொடிக்கம்பம் சாய்ந்து விபத்தில் சிக்கிய பெண்; நா.கார்த்திக் எம்.எல்.ஏ நேரில் ஆறுதல்

கோவை: கோவை கோல்டு வின்ஸ் அருகே நேற்று அதிமுக கொடி கம்பம் சாய்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த பெண்ணை திமுக மாநகர் மாவட்ட பொறுப்பாளரும்,சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நா.கார்த்திக் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

கோவை: கோவை கோல்டு வின்ஸ் அருகே நேற்று அதிமுக கொடி கம்பம் சாய்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த பெண்ணை திமுக மாநகர் மாவட்ட பொறுப்பாளரும்,சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நா.கார்த்திக் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

கோல்டு வின்ஸ் பகுதியில் நேற்று முதல்வர் எடப்பாடி வருகைக்காகவும், அதிமுக இல்ல திருமண நிகழ்ச்சிக்காகவும் அதிமுக கொடிகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது, அந்த வழியாக தனது இருசக்கர வாகனத்தில் சென்ற அனுராதா (22) என்ற இளம்பெண்ணின் மீது அதிமுக கொடி கம்பம் சாய இருந்த நிலையில், தடுமாறிய அந்த பெண் மீது பின்னால் வந்த லாரி மோதியதில் அந்த பெண்ணின் இரண்டு கால்களிலும் பலத்த காயமடைந்து நீலாம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நா.கார்த்திக் இன்று மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ.கார்த்திக், நீதிமன்ற அறிவுரைக்குப் பின்னரும் இது போன்ற செயல்களில் தொடர்ந்து அதிமுகவினர் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது எனவும் சட்டத்தை மீறி கொடிக் கம்பங்கள் அமைத்த அதிமுகவினர் மீது போலீசார் பாகுபாடின்றி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்றும் அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து விபத்துக்குள்ளான வழக்கை சாதாரண விபத்து வழக்காக காவல் துறை மாற்றியிருப்பதாக குற்றச்சாட்டினார்.

மேலும், விபத்தில் படுகாயமடைந்த அனுராதாவை மருத்துவமனையில் அனுமதித்த வடிவேல் என்பவரை சட்டத்திற்கு புறம்பாக காவல் நிலையத்தில் இரவு வரை வைத்திருந்தது ஏன் என கேள்வி எழுப்பினார். முதலமைச்சர் வருகைக்காக வைத்திருந்த அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்ததே விபத்திற்கு காரணம் எனவும் விபத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்த அவர், அனுமதி பெற்று கொடிக்கம்பங்கள் நடப்பட்டதா? என்பது குறித்து விளக்க அளிக்க வேண்டும் என்று கூறினார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....