நடமாட முடியாத குட்டி யானையுடன் தாய் யானையின் பாசப்போராட்டம்; உடனடியாக சிகிச்சையளிக்க கோரிக்கை
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கால் ஊனம் ஏற்பட்டு அவதிப்பட்டுவரும் 8 மாத குட்டி யானைக்கு உடனடியாக சிகிச்சை அளித்து காப்பாற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சியினர் சார்பில் கோவை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் ராசாமணி தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சியினர், இயக்கங்கள், மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

அப்போது, கால் ஊனம் ஏற்பட்டு அவதிப்பட்டு வரும் குட்டி யானையை காப்பாற்றக் கோரி, விடுதலை சிறுத்தை கட்சி கோவை மண்டல அமைப்பு செயலாளர் கலையரசன் மனு ஒன்றை அளித்தார்.
அதில், கோவை வால்பாறை தாய்முடி எஸ்டேட் பகுதிக்கு யானைகள் கூட்டமாக வந்துள்ளது. இதில் ஒரு தாய் யானையுடன் வந்த அதன் 8 மாத குட்டி யானைக்கு கால் ஊனம் ஏற்பட்டு அதே பகுதியில் கடந்த நான்கு வாரமாக மிகவும் அவதிப்பட்டு வருகின்றது. இதனால் தாய் யானையும் அங்கேயே குட்டி யானையை பாதுகாத்து வருகின்றது. மேலும், அங்கு வசிக்கும் மக்களுக்கும் உயிர் சேதம் ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக குட்டி யானையை மீட்டு உயரிய மருத்துவ சிகிச்சை அளித்திட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் ராசாமணி தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சியினர், இயக்கங்கள், மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

அப்போது, கால் ஊனம் ஏற்பட்டு அவதிப்பட்டு வரும் குட்டி யானையை காப்பாற்றக் கோரி, விடுதலை சிறுத்தை கட்சி கோவை மண்டல அமைப்பு செயலாளர் கலையரசன் மனு ஒன்றை அளித்தார்.
அதில், கோவை வால்பாறை தாய்முடி எஸ்டேட் பகுதிக்கு யானைகள் கூட்டமாக வந்துள்ளது. இதில் ஒரு தாய் யானையுடன் வந்த அதன் 8 மாத குட்டி யானைக்கு கால் ஊனம் ஏற்பட்டு அதே பகுதியில் கடந்த நான்கு வாரமாக மிகவும் அவதிப்பட்டு வருகின்றது. இதனால் தாய் யானையும் அங்கேயே குட்டி யானையை பாதுகாத்து வருகின்றது. மேலும், அங்கு வசிக்கும் மக்களுக்கும் உயிர் சேதம் ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக குட்டி யானையை மீட்டு உயரிய மருத்துவ சிகிச்சை அளித்திட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.