நீலகிரி: உதகையில் தேநீர் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை தென்னிந்திய வாரியத்தின் செயல் இயக்குநர் பாலாஜி அவர்கள் துவக்கி வைத்தார். இதில் மகளிர் குழுவைச் சேர்ந்த பெண்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நீலகிரி: உதகையில் தேநீர் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை தென்னிந்திய வாரியத்தின் செயல் இயக்குநர் பாலாஜி அவர்கள் துவக்கி வைத்தார். இதில் மகளிர் குழுவைச் சேர்ந்த பெண்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தென்னிந்திய தேயிலை வாரியம் மற்றும் ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தேயிலை மேம்பாட்டிற்காக மகளிர் சுய உதவிக் குழுக்கள் கலந்து கொண்ட பேரணி உதகை காபி ஹவுஸ் சந்திப்பில் துவங்கியது.
இதில் கலந்து கொண்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் தேநீர் பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பேரணி சென்றனர். காபி ஹவுஸ் சந்திப்பில் துவங்கிய பேரணியானது கமர்சியல் சாலை, சேரிங் கிராஸ் போன்ற முக்கிய வீதிகள் வழியே அரசு தாவரவியல் பூங்கா அருகில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நிறைவடைந்தது.
இந்தப் பேரணியில் மகளிர் திட்ட இயக்குனர் பாபு மற்றும் அத்துறையைச் சார்ந்த அரசு அதிகாரிகளும், பெண்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தென்னிந்திய தேயிலை வாரியம் மற்றும் ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தேயிலை மேம்பாட்டிற்காக மகளிர் சுய உதவிக் குழுக்கள் கலந்து கொண்ட பேரணி உதகை காபி ஹவுஸ் சந்திப்பில் துவங்கியது.
இதில் கலந்து கொண்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் தேநீர் பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பேரணி சென்றனர். காபி ஹவுஸ் சந்திப்பில் துவங்கிய பேரணியானது கமர்சியல் சாலை, சேரிங் கிராஸ் போன்ற முக்கிய வீதிகள் வழியே அரசு தாவரவியல் பூங்கா அருகில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நிறைவடைந்தது.
இந்தப் பேரணியில் மகளிர் திட்ட இயக்குனர் பாபு மற்றும் அத்துறையைச் சார்ந்த அரசு அதிகாரிகளும், பெண்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.