கோவை: கோவை அரசு மருத்துவமனையில் உள்ள "ரெட் ஜோனில்" சிகிச்சை பெற்று வரும் மாவோயிஸ்ட் தீபக்கை இன்று அதிகாலை ஒரு மணியளவில் நேரில் சந்தித்த முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சக்திவேல் அவரை வரும் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் உள்ள "ரெட் ஜோனில்" சிகிச்சை பெற்று வரும் மாவோயிஸ்ட் தீபக்கை இன்று அதிகாலை ஒரு மணியளவில் நேரில் சந்தித்த முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சக்திவேல் அவரை வரும் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 9ஆம் தேதி உளவுத்துறை மூலம் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சேம்பு கரையிலிருந்து பெருமாள் முடி அடிவாரம் தேடியதில் துப்பாக்கியுடன் சென்றுகொண்டிருந்த மூன்று பேரை பிடிக்க தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையினர் முற்பட்டனர். அவர்கள் தப்பி தப்பியோடிய போது இதில் ஒருவர் எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் விழுந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதைதொடர்ந்து அவரை மீட்டு வீரபாண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை கொடுத்து. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் நடைபெற்ற விசாரணையில் பிடிபட்ட நபர் மாவோயிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்த தீபக் என்பதும், இவர் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், இவரது உண்மை பெயர் சந்துரு என்பதும் தெரியவந்துள்ளது.
ஆனால் அவர் தன்னை சீனிக் என்றும் தான் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் சொல்லி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 9ஆம் தேதி உளவுத்துறை மூலம் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சேம்பு கரையிலிருந்து பெருமாள் முடி அடிவாரம் தேடியதில் துப்பாக்கியுடன் சென்றுகொண்டிருந்த மூன்று பேரை பிடிக்க தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையினர் முற்பட்டனர். அவர்கள் தப்பி தப்பியோடிய போது இதில் ஒருவர் எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் விழுந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதைதொடர்ந்து அவரை மீட்டு வீரபாண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை கொடுத்து. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் நடைபெற்ற விசாரணையில் பிடிபட்ட நபர் மாவோயிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்த தீபக் என்பதும், இவர் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், இவரது உண்மை பெயர் சந்துரு என்பதும் தெரியவந்துள்ளது.
ஆனால் அவர் தன்னை சீனிக் என்றும் தான் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் சொல்லி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.