கோவை: கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த ரொட்டிக்கடை பகுதியில் ஷேக்கல் முடி சாலையில் உள்ள காட்டேஜில் சட்ட விரோதமாக பார் நடத்தி அதன் மூலம் மது விற்பனை செய்து வருவதை உளவு பிரிவு காவல்துறையினர் கண்டு பிடித்தனர்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த ரொட்டிக்கடை பகுதியில் ஷேக்கல் முடி சாலையில் உள்ள காட்டேஜில் சட்ட விரோதமாக பார் நடத்தி அதன் மூலம் மது விற்பனை செய்து வருவதை உளவு பிரிவு காவல்துறையினர் கண்டு பிடித்தனர்.
இதனை தொடார்ந்து வால்பாறை காவல் ஆய்வாளர், பாலமுருகன் ரொட்டிக்கடை பகுதியில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு செயல்பட்டு வந்த ஹனிபீ காட்டேஜ் (Honey bee) முறையான அனுமதி இன்றி இயங்குவது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும், அங்கு அனுமதியின்றி சட்ட விரோதமாக பார் நடத்துவதும் கண்டு பிடிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து, ஹனிபீ காட்டேஜில் வேலை செய்து வந்த அஜீத் (22), அக்சய் (22) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஃபிலிப் (43) என்பவரையும் தலைமறைவான காட்டேஜ் உரிமையாளர் ஜார்ஜ் என்பவரையுரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மேலும், வால்பாறை பகுதியில் காட்டேஜ்களில் அனுமதியின்றி சட்ட விரோதமாக பார் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வால்பாறை காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.