கோவை : தமிழ் நாடு சிறப்பு அதிரடிப்படை போலீசாரால் நேற்று கோவையில் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட்க்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை : தமிழ் நாடு சிறப்பு அதிரடிப்படை போலீசாரால் நேற்று கோவையில் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட்க்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கேரள மாநிலம் அட்டப்பாடி வனப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தண்டர் போல்ட் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த மணிவாசகம், ,அரவிந்த், ரமா,ப்சுரேஷ் ஆகிய 4 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், தலைமறைவான மாவோயிஸ்ட்டுகளை தேடும் பணியில் தமிழக மற்றும் கேரள மாநில போலீசார் தனித்தனியாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று தமிழக வனப்பகுதியில் கோவை ஆனைகட்டி அருகே இருக்கும் முழக்கன்கல் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பது சிறப்பு அதிரடிப் படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சிறப்பு அதிரடிப்படை போலீசார் அந்த பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது காயமடைந்த நிலையில் இருந்த மாவோயிஸ்ட் தீபக்கை உடன் இருந்த 3 மாவோயிஸ்டுகள் அழைத்து வந்தது தெரியவந்தது.
அப்போது, சிறப்பு அதிரடிப்படை போலீசாரை கண்ட மாவோயிஸ்டுகள் தீபக்கை அங்கேயே விட்டுவிட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் தலைமறைவாகினர்.

இந்நிலையில் படுகாயத்துடன் உடல் சோர்வுற்ற நிலையில் இருந்த தீபக்கை கைது செய்த சிறப்பு அதிரடிப்படை போலீசார் அவரை அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியே தூக்கி வந்தனர். பின்னர் அவரை வீரபாண்டி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில
வைத்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கேரள மாநிலம் அட்டப்பாடி வனப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தண்டர் போல்ட் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த மணிவாசகம், ,அரவிந்த், ரமா,ப்சுரேஷ் ஆகிய 4 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், தலைமறைவான மாவோயிஸ்ட்டுகளை தேடும் பணியில் தமிழக மற்றும் கேரள மாநில போலீசார் தனித்தனியாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று தமிழக வனப்பகுதியில் கோவை ஆனைகட்டி அருகே இருக்கும் முழக்கன்கல் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பது சிறப்பு அதிரடிப் படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சிறப்பு அதிரடிப்படை போலீசார் அந்த பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது காயமடைந்த நிலையில் இருந்த மாவோயிஸ்ட் தீபக்கை உடன் இருந்த 3 மாவோயிஸ்டுகள் அழைத்து வந்தது தெரியவந்தது.
அப்போது, சிறப்பு அதிரடிப்படை போலீசாரை கண்ட மாவோயிஸ்டுகள் தீபக்கை அங்கேயே விட்டுவிட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் தலைமறைவாகினர்.

இந்நிலையில் படுகாயத்துடன் உடல் சோர்வுற்ற நிலையில் இருந்த தீபக்கை கைது செய்த சிறப்பு அதிரடிப்படை போலீசார் அவரை அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியே தூக்கி வந்தனர். பின்னர் அவரை வீரபாண்டி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில
வைத்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.