கோவை: கோவையை சேர்ந்த எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் நிறுவனத்திற்கு ஜப்பானின் உயரிய விருதான 'டேமிங் 2019' விருது வழங்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையை சேர்ந்த எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் நிறுவனத்திற்கு ஜப்பானின் உயரிய விருதான 'டேமிங் 2019' விருது வழங்கப்பட்டுள்ளது.
கோவையை அடித்தளமாக கொண்ட எல்.ஜி எக்யூப்மெண்ட்ஸ் நிறுவனம் சர்வதேச அளவில் தொழிலக மற்றும் கட்டுமானத்துறைக்கு தேவையான கம்ப்ரஷர்களை உற்பத்தி செய்து வருகிறது.
இந்த நிறுவனம் கடந்த 60 ஆண்டுகளாக ஒட்டுமொத்த தர மேலாண்மையை கடைபிடித்து வந்ததால் ஜப்பான் நாட்டில் தொழிலகங்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான 'டேமிங் 2019' என்ற விருதை பெற்றுள்ளது. இந்த விருதை நவம்பர் 6ம் தேதி டேமிங்க் பரிசு கமிட்டியின் தலைவர் ஹிரோக்கி நகனிஷி, எல்.ஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெய்ராம் வரதராஜிடம் வழங்கினார்.

இந்த நிலையில், கோவையில் இன்று ஜெய்ராம் வரதராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், இந்த விருதினை அனைத்து எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் பணியாளர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். ஒட்டுமொத்த மேலாண்மை எங்களது நிறுவனத்தை அனைத்து பங்குதாரர்களிடையேயும், வாடிக்கையாளர்களிடையேயும் மேம்பட்ட நிறுவனமாக உயர்த்த உதவியது என்றார்.
2008ம் ஆண்டில் தொடங்கிய எல்ஜியின் ஒட்டுமொத்த தர மேலாண்மையானது, 2014ம் ஆண்டு முதல் பலனளிக்க தொடங்கியதாகவும் 2027ம் ஆண்டுக்குள் எல்ஜி நிறுவனம் உலகின் இரண்டாவது மாபெரும் கம்பரஷர் தயாரிப்பாளராக இருக்க வேண்டும் என்பதே இலக்கு என்று கூறிய அவர், மனிதவள மேம்பாட்டாலும், தொடர்ச்சியான பல்வேறு வகையிலும் மேம்படுத்தப்பட்ட நடவடிக்கையாலும் இது சாத்தியமாகும் என்று தெரிவித்தார்.

மேலும், சர்வதேச அளவில் எல்ஜி நிறுவனம் 15 மில்லியன் டாலர் மதிப்புடன் செயல்படுகிறது. இந்தியாவில் 5 சதவீத விற்பனையும் மற்ற நாடுகளில் 95 விற்பனையும் உள்ளது. எனவே, இந்த பொருளாதார வீழ்ச்சி எங்கள் நிறுவனத்தில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றவர், சமூகப் பொறுப்பு திட்ட அடிப்படையில் வெள்ளலூர் பகுதியில் பள்ளி ஒன்றை நடத்தி வருவதாகவும் அதில், 50 சதவீதம் பேர் ஏழைக்குழந்தைகள் படிக்கின்றனர் என்றும் இந்த பள்ளியின் கட்டுமானத்திற்கும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கும் ரூ.25 கோடி செலவாகியுள்ளதாக கூறினார்.
கோவையை அடித்தளமாக கொண்ட எல்.ஜி எக்யூப்மெண்ட்ஸ் நிறுவனம் சர்வதேச அளவில் தொழிலக மற்றும் கட்டுமானத்துறைக்கு தேவையான கம்ப்ரஷர்களை உற்பத்தி செய்து வருகிறது.
இந்த நிறுவனம் கடந்த 60 ஆண்டுகளாக ஒட்டுமொத்த தர மேலாண்மையை கடைபிடித்து வந்ததால் ஜப்பான் நாட்டில் தொழிலகங்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான 'டேமிங் 2019' என்ற விருதை பெற்றுள்ளது. இந்த விருதை நவம்பர் 6ம் தேதி டேமிங்க் பரிசு கமிட்டியின் தலைவர் ஹிரோக்கி நகனிஷி, எல்.ஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெய்ராம் வரதராஜிடம் வழங்கினார்.

இந்த நிலையில், கோவையில் இன்று ஜெய்ராம் வரதராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், இந்த விருதினை அனைத்து எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் பணியாளர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். ஒட்டுமொத்த மேலாண்மை எங்களது நிறுவனத்தை அனைத்து பங்குதாரர்களிடையேயும், வாடிக்கையாளர்களிடையேயும் மேம்பட்ட நிறுவனமாக உயர்த்த உதவியது என்றார்.
2008ம் ஆண்டில் தொடங்கிய எல்ஜியின் ஒட்டுமொத்த தர மேலாண்மையானது, 2014ம் ஆண்டு முதல் பலனளிக்க தொடங்கியதாகவும் 2027ம் ஆண்டுக்குள் எல்ஜி நிறுவனம் உலகின் இரண்டாவது மாபெரும் கம்பரஷர் தயாரிப்பாளராக இருக்க வேண்டும் என்பதே இலக்கு என்று கூறிய அவர், மனிதவள மேம்பாட்டாலும், தொடர்ச்சியான பல்வேறு வகையிலும் மேம்படுத்தப்பட்ட நடவடிக்கையாலும் இது சாத்தியமாகும் என்று தெரிவித்தார்.

மேலும், சர்வதேச அளவில் எல்ஜி நிறுவனம் 15 மில்லியன் டாலர் மதிப்புடன் செயல்படுகிறது. இந்தியாவில் 5 சதவீத விற்பனையும் மற்ற நாடுகளில் 95 விற்பனையும் உள்ளது. எனவே, இந்த பொருளாதார வீழ்ச்சி எங்கள் நிறுவனத்தில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றவர், சமூகப் பொறுப்பு திட்ட அடிப்படையில் வெள்ளலூர் பகுதியில் பள்ளி ஒன்றை நடத்தி வருவதாகவும் அதில், 50 சதவீதம் பேர் ஏழைக்குழந்தைகள் படிக்கின்றனர் என்றும் இந்த பள்ளியின் கட்டுமானத்திற்கும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கும் ரூ.25 கோடி செலவாகியுள்ளதாக கூறினார்.