தமிழக - கேரள எல்லையில் துப்பாக்கி முனையில் மாவோயிஸ்ட் கைது; தப்பி ஓடியவர்களுக்கு போலீசார் வலைவீச்சு

கோவை: தமிழக - கேரள எல்லையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் தீபக்கை தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையினர் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர்.


கோவை: தமிழக - கேரள எல்லையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் தீபக்கை தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையினர் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர்.

தமிழக - கேரள எல்லைப்பகுதிகளில் உள்ள மலை கிராமங்களில் துப்பாக்கியுடன் மாவோயிஸ்ட்டுகள் சுற்றி வருவதாக உளவுத்துறை மூலம் சிறப்பு அதிரடிப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு அதிரடிப்படை எஸ்பி மூர்த்தி தலைமையில் மூன்று குழுவாக தேடுதல் வேட்டை நடத்தினர்



இந்த தேடுதல் வேட்டையில், கோவை மாவட்டத்தில் உள்ள சேம்புகரைக்கு அருகே உள்ள மூலக்கண்கள் பகுதியில் மாவோயிஸ்ட் தீபக்கை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். மேலும், உடனிருந்த மாவோயிஸ்ட் மாதேஷும், பெண் மாவோயிஸ்ட்டு ஒருவரும் தப்பியோடியதையடுத்து இருவரையும் தற்போது தமிழக எல்லைப் பகுதிகளில் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், கைதான தீபக் மீது தமிழகத்தில் எந்தவிதமான வழக்குகளும் இல்லாத காரணத்தினால் கேரளா மாநிலம் பாலக்காடு போலீசாரிடம் அவரை ஒப்படைக்க உள்ளதாகவும் காவல்துறை வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஒருவாரமாக தீபக்கை கேரளா தண்டர்போல்டு போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில், அவர் பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகியது. இந்நிலையில், தமிழக சிறப்பு அதிரடிப் படை போலீசார் மாவோயிஸ்ட் தீபக்கை கைது செய்தது பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், தீபக்கை போலீசார் கைது செய்யும் பொழுது காயங்கள் ஏற்பட்டுள்ளதால், அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வர உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...