நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கிளன்டேல் தனியார் தேயிலை தோட்டத்தில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்த சிறுத்தையை கைப்பற்றிய வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கிளன்டேல் தனியார் தேயிலை தோட்டத்தில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்த சிறுத்தையை கைப்பற்றிய வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
குன்னூர் அருகே உள்ள கிளன்டேல் தனியார் தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்கள், அப்பகுதியில் சிறுத்தை ஒன்று காயத்துடன் இறந்து கிடப்பதைக் கண்டு வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதன் பேரில் குன்னுார் வனச்சரகர் சரவணன் தலைமையில் வனவர் பெலிக்ஸ் மற்றும் வனக்காப்பாளர்கள் மணிகண்டன் நாகராஜ், விக்ரம் மற்றும் லோகேஷ்வரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுத்தையின் உடலை பார்வையிட்டனர்.

இரு சிறுத்தைகள் இடையே நடந்த மோதலில் சிறுத்தை இறந்திருக்கலாம் எனவும் இறந்த ஆண் சிறுத்தைக்கு 5 வயது இருக்கும் என்று கூறப்படுகிறது

பின்னர், கால்நடை மருத்துவர் ராஜ் முரளி வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடந்த பின்னர், உடலை தீயிட்டு எரித்தனர்.
குன்னூர் அருகே உள்ள கிளன்டேல் தனியார் தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்கள், அப்பகுதியில் சிறுத்தை ஒன்று காயத்துடன் இறந்து கிடப்பதைக் கண்டு வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதன் பேரில் குன்னுார் வனச்சரகர் சரவணன் தலைமையில் வனவர் பெலிக்ஸ் மற்றும் வனக்காப்பாளர்கள் மணிகண்டன் நாகராஜ், விக்ரம் மற்றும் லோகேஷ்வரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுத்தையின் உடலை பார்வையிட்டனர்.

இரு சிறுத்தைகள் இடையே நடந்த மோதலில் சிறுத்தை இறந்திருக்கலாம் எனவும் இறந்த ஆண் சிறுத்தைக்கு 5 வயது இருக்கும் என்று கூறப்படுகிறது

பின்னர், கால்நடை மருத்துவர் ராஜ் முரளி வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடந்த பின்னர், உடலை தீயிட்டு எரித்தனர்.