நிலம்‌ இந்துக்களுக்கே சொந்தம்; அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் - உச்சநீதிமன்றம்‌

நிலம்‌ இந்துக்களுக்கே சொந்தம்‌ என்றும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர்‌ மாற்று நிலம்‌ வழங்க உச்சநீதிமன்றம்‌ உத்தரவிட்டுள்ளது.


நிலம்‌ இந்துக்களுக்கே சொந்தம்‌ என்றும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர்‌ மாற்று நிலம்‌ வழங்க உச்சநீதிமன்றம்‌ உத்தரவிட்டுள்ளது.

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு? என்பது தொடர்பான வழக்கில், பாபர்‌ மசூதி இருந்த இடம்‌ முழுக்க முழுக்க தங்களது என இஸ்லாமிய அமைப்புகள்‌ நிரூபிக்கவில்லை எனவும் இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர்‌ மாற்று நிலம்‌ வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம்‌ உத்தரவிட்டுள்ளது.

அதேபோல, வக்பு போர்டு ஏற்கும்‌ இடத்தில்‌ 5 ஏக்கர்‌ நிலம்‌ தர மத்திய அரசு, உத்தரப்பிரதேச அரசுகளுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்‌, அலகாபாத்‌ உயர்நீதிமன்றம்‌ நிலத்தை 3ஆக பிரித்துக்கொடுத்தது தவறு என்று கருத்து தெரிவித்துள்ளது.

மேலும், சர்ச்சைக்குரிய இடத்தில்‌ கோயில்‌ கட்டுவதற்கான அறக்கட்டளையை 3 மாதங்களுக்குள்‌ மத்திய அரசு உருவாக்க வேண்டும்‌ என்றும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர்‌ நிலத்தை புதிதாக அமைக்கப்படவுள்ள அறக்கட்டளையிடம்‌ ஒப்படைக்க வேண்டும்‌ என உச்சநீதிமன்றம்‌ தெரிவித்துள்ளது. 

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....