அயோத்தி வழக்கு: பாபர்‌ மசூதி கட்டப்படுவதற்கு முன்‌ இருந்த கட்டடம்‌ இஸ்லாமிய கட்டுமானம்‌ அல்ல - நீதிபதி ரஞ்சன்‌ கோகாய்‌

டெல்லி: பாபர்‌ மசூதி காலியிடத்தில்‌ கட்டப்படவில்லை எனவும் அந்த இடத்தில்‌ முன்பே கட்டடம்‌ ஒன்று இருந்ததாகவும் அங்கிருந்த கட்டடம்‌, இஸ்லாமிய கட்டுமானம்‌ அல்ல என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.


டெல்லி: பாபர்‌ மசூதி காலியிடத்தில்‌ கட்டப்படவில்லை எனவும் அந்த இடத்தில்‌ முன்பே கட்டடம்‌ ஒன்று இருந்ததாகவும் அங்கிருந்த கட்டடம்‌, இஸ்லாமிய கட்டுமானம்‌ அல்ல என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு? என்பது தொடர்பான வழக்கில், 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒரே தீர்ப்பை வழங்கி உள்ளனர்.

அதில்,ஷியா வாரியம் மற்றும் வக்பு சன்னி அமைப்பின் மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. வரலாறு, மதம் கடந்த வழக்கு இது. ஒரு மதத்தின் நம்பிக்கை மற்ற மதத்தின் நம்பிக்கையை தடுப்பதாக இருக்கக் கூடாது. இறை நம்பிக்கைக்குள் உச்சநீதிமன்றம் செல்வது தேவையற்றது என கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அயோத்தியில் பாபரால் மசூதி கட்டப்பட்டதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது என்று 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. சர்ச்சைக்குரிய இடத்தில் 1949ல் ராமர் சிலை வைக்கப்பட்டது. ஒருவரின் மத நம்பிக்கையில் மற்றொருவரின் மத நம்பிக்கை தலையிட முடியாது. நிலத்துக்கு உரிமை கோரிய நிர்மோஹி அகாரா மனுவில்‌ ஆதாரங்கள்‌ இருப்பதாகத்‌ தெரியவில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....