இன்று அயோத்தி தீர்ப்புவரவுள்ளதையொட்டி கோவை மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

கோவை: உத்தர பிரதேசம் மாநிலம், அயோத்தியில் ராமஜென்மபூமி, பாபர் மசூதி அமைந்திருந்ததாக கூறப்படுகிற சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தமானது..? என்கிற தீர்ப்பு நாளை உச்சநீதிமன்றத்தில் வெளியாகவுள்ளது.

கோவை: உத்தர பிரதேசம் மாநிலம், அயோத்தியில் ராமஜென்மபூமி, பாபர் மசூதி அமைந்திருந்ததாக கூறப்படுகிற சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தமானது..? என்கிற தீர்ப்பு நாளை உச்சநீதிமன்றத்தில் வெளியாகவுள்ளது.

இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை இயக்குனர் ஜே.கே

திரிபாதி உத்தரவின் பேரில் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, ஏற்கனவே அனைத்து காவல் எல்லைகளிலும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக "இரு தரப்பினர்" மத்தியிலும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

இப்படியிருக்க, கோவை மாநகர காவல் எல்லை மற்றும் மாவட்ட காவல் எல்லை பகுதிகளில்

நாளை தீர்ப்பு வர உள்ளது என்கிற அறிவிப்பு வெளியானதிலிருந்து பாதுகாப்பு பணிகள் குறித்து போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

முக்கியமாக, ரயில் நிலையம், விமான நிலையம், பேருந்து நிலையம் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர ரோந்து பணிகளை வெள்ளிக்கிழமை இரவு முதலே மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், வழக்கமாக இரவு 11 மணிக்கு மேல் மூடப்படும் கடைகள் கூட விரைவில் மூட போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

அதேபோல, கோவை மாநகரில் காவல்துறை உயரதிகாரிகள் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பாக, வாட்ஸ்அப் மற்றும் சமூக ஊடகங்களில் பொய்யான வதந்திகளை கிளப்பி சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

அதேபோல, கோவை மாநகரில் உள்ள கோயில்கள் மற்றும் மசூதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் எனவும் காவல்துறை வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....