கோவை: ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழும் குழந்தைகளை காப்பாற்ற புதிய கருவி ஒன்றை உருவாக்கியுள்ள கோவை தொழில் அதிபர் அதற்கு சுர்ஜித் நினைவாக HOS - (HANDS OF SURJITH) என பெயரிட்டுள்ளார்.
கோவை: ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழும் குழந்தைகளை காப்பாற்ற புதிய கருவி ஒன்றை உருவாக்கியுள்ள கோவை தொழில் அதிபர் அதற்கு சுர்ஜித் நினைவாக HOS - (HANDS OF SURJITH) என பெயரிட்டுள்ளார்.
கடந்த மாதம் திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுஜித் வில்சன் என்ற இரண்டு வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்து ஐந்து நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டான்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து வல்லுநர்களும், பொறியாளர்களும், மாணவர்களும் மேலும் ஒரு சுஜித்திற்கு இது போல் நடக்கக் கூடாது என்று ஆழ்துளை கிணறுகளில் விழும் குழந்தைகளை மீட்கும் கருவிகளை கண்டுபிடிக்க துவங்கிவிட்டனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் தொழில் அதிபர் டி.நவநீத். இவர் சுர்ஜித் உயிரிழப்பை தொடர்ந்து, ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழும் குழந்தைகளை காப்பாற்ற கை போன்ற வடிவமைப்பில் புதிய கருவியை உருவாக்கியுள்ளார்.

இந்த செயற்கை கையுடன் இரு கயிறுகள் இணைக்கப்பட்டு, ஆழ்துளை கிணற்றுக்குள் விடப்படும். ஆழ்துளை கிணற்றுக்குள் விழும் குழந்தைகளின் கை எப்போதுமே மேல் நோக்கி தான் இருக்கும் என்பதால் இந்த செயற்கை பொம்மை கையை உள்ளே செலுத்தும் போது, அது குழந்தையின் கையை இறுக்கமாகப் பிடித்துக்கொள்ளும். அப்போது அந்த இரு கயிறுகளின் மூலம் குழந்தையின் கையில் முடிச்சு போட்டு எளிதாக மேலே தூக்கிவிடலாம். இந்த கருவி 300 அடி ஆழம் வரை செல்லக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த HOS கருவி 3 அடி அங்குலம் உள்ளதால், எந்த சிறு ஆழ்துளை கிணற்றுக்குள்ளும் எளிதில் சென்று குழந்தையை மீட்கும் திறன் பெற்றுள்ளது. இந்த கருவி சிறிய வடிவில் உள்ளதால் குழந்தையை மீட்கும் போது எந்தவிதமான மண்சரிவுவும் ஏற்படாது. மேலும், எளிய வடிவில் இருப்பதால் இந்த கருவியை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் எளிதில் குழந்தைகளை காப்பாற்றி விடலாம்.
இது குறித்து நவ்நீத் கூறுகையில், இந்த கருவியை விட நூறு மடங்கு செயல்திறன் கொண்ட ஓர் கருவியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், அந்தப் புதிய கருவி ஓரிரு மாதங்களுக்குள் உருவாக்கப்படும் என்றார், மேலும், புதிதாக உருவாக்கப்படும் கருவியை ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய குழந்தையை மீட்கும் தன்னார்வ குழுவிற்கு இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஆழ்குழாய் கிணறுகளில் நேரும் இத்தகைய விபத்துகளை தடுக்க அரசு சில எளிய நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த கருவிக்கு HOS- (HANDS OF SUJITH) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதாவது, இனி ஏதாவது ஒரு குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தால், அந்த குழந்தையை சுஜித்தின் கைகளே காப்பாற்றும் என்பது தான் இதன் பொருள். இந்த கருவியின் மூலம் இனிமேல் இதுபோன்ற ஒரு விபத்து நடக்காத வண்ணம் தடுக்க முடியும் என்று நவ்நீத் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக, பள்ளி, கல்லூரி, மாணவர்கள் தங்கள் நிறுவனங்களுக்கு அருகில் இருக்கும் ஆழ்குழாய் கிணறுகளை முறையாக மூடி அதை வீடியோ எடுத்து 9486976099 எண்ணிற்கு பகிர்ந்தால் அவர்களுக்கு தக்க சான்றிதழும், பரிசும் வழங்கப்படும் என நவநீத் கூறினார்.
கடந்த மாதம் திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுஜித் வில்சன் என்ற இரண்டு வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்து ஐந்து நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டான்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து வல்லுநர்களும், பொறியாளர்களும், மாணவர்களும் மேலும் ஒரு சுஜித்திற்கு இது போல் நடக்கக் கூடாது என்று ஆழ்துளை கிணறுகளில் விழும் குழந்தைகளை மீட்கும் கருவிகளை கண்டுபிடிக்க துவங்கிவிட்டனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் தொழில் அதிபர் டி.நவநீத். இவர் சுர்ஜித் உயிரிழப்பை தொடர்ந்து, ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழும் குழந்தைகளை காப்பாற்ற கை போன்ற வடிவமைப்பில் புதிய கருவியை உருவாக்கியுள்ளார்.

இந்த செயற்கை கையுடன் இரு கயிறுகள் இணைக்கப்பட்டு, ஆழ்துளை கிணற்றுக்குள் விடப்படும். ஆழ்துளை கிணற்றுக்குள் விழும் குழந்தைகளின் கை எப்போதுமே மேல் நோக்கி தான் இருக்கும் என்பதால் இந்த செயற்கை பொம்மை கையை உள்ளே செலுத்தும் போது, அது குழந்தையின் கையை இறுக்கமாகப் பிடித்துக்கொள்ளும். அப்போது அந்த இரு கயிறுகளின் மூலம் குழந்தையின் கையில் முடிச்சு போட்டு எளிதாக மேலே தூக்கிவிடலாம். இந்த கருவி 300 அடி ஆழம் வரை செல்லக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த HOS கருவி 3 அடி அங்குலம் உள்ளதால், எந்த சிறு ஆழ்துளை கிணற்றுக்குள்ளும் எளிதில் சென்று குழந்தையை மீட்கும் திறன் பெற்றுள்ளது. இந்த கருவி சிறிய வடிவில் உள்ளதால் குழந்தையை மீட்கும் போது எந்தவிதமான மண்சரிவுவும் ஏற்படாது. மேலும், எளிய வடிவில் இருப்பதால் இந்த கருவியை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் எளிதில் குழந்தைகளை காப்பாற்றி விடலாம்.
இது குறித்து நவ்நீத் கூறுகையில், இந்த கருவியை விட நூறு மடங்கு செயல்திறன் கொண்ட ஓர் கருவியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், அந்தப் புதிய கருவி ஓரிரு மாதங்களுக்குள் உருவாக்கப்படும் என்றார், மேலும், புதிதாக உருவாக்கப்படும் கருவியை ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய குழந்தையை மீட்கும் தன்னார்வ குழுவிற்கு இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஆழ்குழாய் கிணறுகளில் நேரும் இத்தகைய விபத்துகளை தடுக்க அரசு சில எளிய நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த கருவிக்கு HOS- (HANDS OF SUJITH) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதாவது, இனி ஏதாவது ஒரு குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தால், அந்த குழந்தையை சுஜித்தின் கைகளே காப்பாற்றும் என்பது தான் இதன் பொருள். இந்த கருவியின் மூலம் இனிமேல் இதுபோன்ற ஒரு விபத்து நடக்காத வண்ணம் தடுக்க முடியும் என்று நவ்நீத் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக, பள்ளி, கல்லூரி, மாணவர்கள் தங்கள் நிறுவனங்களுக்கு அருகில் இருக்கும் ஆழ்குழாய் கிணறுகளை முறையாக மூடி அதை வீடியோ எடுத்து 9486976099 எண்ணிற்கு பகிர்ந்தால் அவர்களுக்கு தக்க சான்றிதழும், பரிசும் வழங்கப்படும் என நவநீத் கூறினார்.