கோவை: அன்னூரில் வாகன நெரிசலைத் தவிர்க்க மறுசீரமைக்கப்பட்ட புதிய புறவழிச்சாலை திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.
கோவை: அன்னூரில் வாகன நெரிசலைத் தவிர்க்க மறுசீரமைக்கப்பட்ட புதிய புறவழிச்சாலை திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த அன்னூரில் தமிழக அரசின் கூட்டுறவுத் துறை சார்பில் புதியதாக சுமார் 37 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர், பயனாளிகளுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான விவசாய கடன், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன், தனிநபர் கடனுதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், அன்னூரில் ஏற்பட்டு வரும் கடுமையான போக்குவரத்து நெரிசல் தீர்வுகாணும் வகையில் புதியதாக மறுசீரமைக்கப்பட்ட புறவழிச்சாலை திட்டம் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அது பல்வேறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதால், தாமதமானாலும் விரைவில் அன்னூருக்கு புறவழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
மேலும், அன்னூர் அதிக அளவில் கிராமங்களைக் கொண்டதாக இருந்தாலும், அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதிகள் போக்குவரத்து ஆகியவை பெற்று தன்னிறைவு அடைந்துள்ளதாகக் கூறிய சபாநாயகர் தனபால், அன்னூர், அவினாசி போன்ற பகுதிகளுக்காக ரூ.240 கோடி செலவில் கொண்டுவரப்பட்ட தனி குடிநீர் திட்டங்கள் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கோவை மண்டல கூட்டுறவு இணை பதிவாளர் பழனிச்சாமி, அன்னூர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் அம்பாள் பழனிச்சாமி, ஒன்றிய துணை செயலாளர் சாய் செந்தில் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த அன்னூரில் தமிழக அரசின் கூட்டுறவுத் துறை சார்பில் புதியதாக சுமார் 37 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர், பயனாளிகளுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான விவசாய கடன், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன், தனிநபர் கடனுதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், அன்னூரில் ஏற்பட்டு வரும் கடுமையான போக்குவரத்து நெரிசல் தீர்வுகாணும் வகையில் புதியதாக மறுசீரமைக்கப்பட்ட புறவழிச்சாலை திட்டம் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அது பல்வேறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதால், தாமதமானாலும் விரைவில் அன்னூருக்கு புறவழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
மேலும், அன்னூர் அதிக அளவில் கிராமங்களைக் கொண்டதாக இருந்தாலும், அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதிகள் போக்குவரத்து ஆகியவை பெற்று தன்னிறைவு அடைந்துள்ளதாகக் கூறிய சபாநாயகர் தனபால், அன்னூர், அவினாசி போன்ற பகுதிகளுக்காக ரூ.240 கோடி செலவில் கொண்டுவரப்பட்ட தனி குடிநீர் திட்டங்கள் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கோவை மண்டல கூட்டுறவு இணை பதிவாளர் பழனிச்சாமி, அன்னூர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் அம்பாள் பழனிச்சாமி, ஒன்றிய துணை செயலாளர் சாய் செந்தில் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.