நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கொலக்கொம்பை எஸ்டேட் பகுதியில் கள்ள துப்பாக்கிகள் வைத்து இருந்தாக 3 பேரை கொலக்கொம்பை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றொருவரைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கொலக்கொம்பை எஸ்டேட் பகுதியில் கள்ள துப்பாக்கிகள் வைத்து இருந்தாக 3 பேரை கொலக்கொம்பை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றொருவரைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.

குன்னூர் அருகே உள்ள கொலக்கொம்பை எஸ்டேட் பகுதியில் துப்பாக்கிகளுடன் மர்ம நபர்கள் சிலர் சுற்றித்திரிவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதிக்கு காவல் ஆய்வாளர் ஆறுச்சாமி, சிறப்பு காவல் துணை ஆய்வாளர் சரவணன் தலைமையில் காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, அப்பகுதியில் சுற்றித் திரிந்த பவானி எஸ்டேட் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, கரும்பாலத்தை சேர்ந்த ரமேஷ், சோலட்டி பகுதியை சேர்ந்த ரகு மூவரையும் பிடித்து வந்து கொலக்கொம்பை காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அவர்களிடமிருந்து 2 நாட்டுத் துப்பாக்கிகள், 13 தோட்டாக்கள், 2 கத்திகள், 1 ஈட்டி, மற்றும் வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் வெடிமருந்து பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் மூவர் மீதும் வன விலங்குகள் வேட்டையாடுதல், அரசு அனுமதி பெறாமல் கள்ளத் துப்பாக்கி வைத்து இருத்தல் உள்ளிட்ட சட்டத்தின் கீழ் கைது செய்தனர்

குன்னூர் அருகே உள்ள கொலக்கொம்பை எஸ்டேட் பகுதியில் துப்பாக்கிகளுடன் மர்ம நபர்கள் சிலர் சுற்றித்திரிவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதிக்கு காவல் ஆய்வாளர் ஆறுச்சாமி, சிறப்பு காவல் துணை ஆய்வாளர் சரவணன் தலைமையில் காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, அப்பகுதியில் சுற்றித் திரிந்த பவானி எஸ்டேட் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, கரும்பாலத்தை சேர்ந்த ரமேஷ், சோலட்டி பகுதியை சேர்ந்த ரகு மூவரையும் பிடித்து வந்து கொலக்கொம்பை காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அவர்களிடமிருந்து 2 நாட்டுத் துப்பாக்கிகள், 13 தோட்டாக்கள், 2 கத்திகள், 1 ஈட்டி, மற்றும் வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் வெடிமருந்து பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் மூவர் மீதும் வன விலங்குகள் வேட்டையாடுதல், அரசு அனுமதி பெறாமல் கள்ளத் துப்பாக்கி வைத்து இருத்தல் உள்ளிட்ட சட்டத்தின் கீழ் கைது செய்தனர்