திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் காதலன் ஏமாற்றியதால் மனமுடைந்த கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் காதலன் ஏமாற்றியதால் மனமுடைந்த கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்துள்ள குங்குமம் பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் பிருந்தா(18). இவர் பல்லடம் அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (23). பிருந்தா மற்றும் சந்தோஷ் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிருந்தா தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பிருந்தா உயிரிழந்தார்.
இதனையடுத்து பிருந்தா உயிரிழப்பு குறித்து உறவினர்கள் கூறும் போது, சந்தோஷ் என்பவர் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதால் தீக்குளித்ததாக பிருந்தா கூறியதாக தெரிவித்தனர். மேலும், தீக்குளித்தது ஏன் என்றும், தன்னை ஏமாற்றியது சந்தோஷ் தான் என்று பிருந்தா கூறிய வீடியோவும் உள்ளதாக தெரிவித்தனர்.

பின்னர், பிருந்தாவின் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்த சந்தோஷ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிருந்தாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பல்லடம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, வழக்கு பதிவு செய்த பல்லடம் போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.