கோவை: பேரூர் - செல்வபுரம் நான்கு வழிச்சாலை பணிகள் தொடங்கப்பட உள்ள நிலையில், செல்வபுரம் சிவாலயா சந்திப்பில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநில நெடுஞ்சாலைத் துறை நேற்று முதல் அகற்றத் தொடங்கியுள்ளது
கோவை: பேரூர் - செல்வபுரம் நான்கு வழிச்சாலை பணிகள் தொடங்கப்பட உள்ள நிலையில், செல்வபுரம் சிவாலயா சந்திப்பில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநில நெடுஞ்சாலைத் துறை நேற்று முதல் அகற்றத் தொடங்கியுள்ளது.

கோவை மாநகர எல்லையிலிருந்து சிறுவாணி வரை நான்கு வழிச் சாலையை அமைப்பதற்கு வசதியாக மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, நெடுஞ்சாலைத் துறையின் வட்டாரங்களின்படி, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பின்னர், நான்கு வழிச்சாலைக்கான சாலை பணிகள் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் பேசுகையில், ரூ.6 கோடி செலவில் மதிப்பிடப்பட்ட நான்கு வழிச் சாலைக்காக 2.5 கி.மீ நீளமுள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றி வருவதாகவும், நெடுஞ்சாலைகளில் சாலையின் அகலம் குறித்து சில விதிமுறைகள் மற்றும் அளவீடுகள் உள்ளன, இந்த விதிமுறையை மீறிய எந்தவொரு கட்டிடமும் அல்லது கட்டமைப்பும் அகற்றப்படும் என்று கூறினார்.
மேலும், குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்களுக்கு சில மாதங்களுக்கு முன்னர் வெளியேற அறிக்கை வழங்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 115 குடும்பங்களுக்கு ஏற்கனவே கோவைப்புதூரில் மாற்று இடவசதி வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், வீடுகள் ஒதுக்கப்படாதவர்களின் பெயர்கள் தற்போது சேர்க்கப்படும் என்று தமிழக வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

கோவை மாநகர எல்லையிலிருந்து சிறுவாணி வரை நான்கு வழிச் சாலையை அமைப்பதற்கு வசதியாக மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, நெடுஞ்சாலைத் துறையின் வட்டாரங்களின்படி, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பின்னர், நான்கு வழிச்சாலைக்கான சாலை பணிகள் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் பேசுகையில், ரூ.6 கோடி செலவில் மதிப்பிடப்பட்ட நான்கு வழிச் சாலைக்காக 2.5 கி.மீ நீளமுள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றி வருவதாகவும், நெடுஞ்சாலைகளில் சாலையின் அகலம் குறித்து சில விதிமுறைகள் மற்றும் அளவீடுகள் உள்ளன, இந்த விதிமுறையை மீறிய எந்தவொரு கட்டிடமும் அல்லது கட்டமைப்பும் அகற்றப்படும் என்று கூறினார்.
மேலும், குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்களுக்கு சில மாதங்களுக்கு முன்னர் வெளியேற அறிக்கை வழங்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 115 குடும்பங்களுக்கு ஏற்கனவே கோவைப்புதூரில் மாற்று இடவசதி வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், வீடுகள் ஒதுக்கப்படாதவர்களின் பெயர்கள் தற்போது சேர்க்கப்படும் என்று தமிழக வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.