பேரூர் - செல்வபுரம் நான்கு வழிச்சாலை ஆரம்ப பணிகளுக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கோவை: பேரூர் - செல்வபுரம் நான்கு வழிச்சாலை பணிகள் தொடங்கப்பட உள்ள நிலையில், செல்வபுரம் சிவாலயா சந்திப்பில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநில நெடுஞ்சாலைத் துறை நேற்று முதல் அகற்றத் தொடங்கியுள்ளது

கோவை: பேரூர் - செல்வபுரம் நான்கு வழிச்சாலை பணிகள் தொடங்கப்பட உள்ள நிலையில், செல்வபுரம் சிவாலயா சந்திப்பில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநில நெடுஞ்சாலைத் துறை நேற்று முதல் அகற்றத் தொடங்கியுள்ளது.



கோவை மாநகர எல்லையிலிருந்து சிறுவாணி வரை நான்கு வழிச் சாலையை அமைப்பதற்கு வசதியாக மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, நெடுஞ்சாலைத் துறையின் வட்டாரங்களின்படி, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பின்னர், நான்கு வழிச்சாலைக்கான சாலை பணிகள் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் பேசுகையில், ரூ.6 கோடி செலவில் மதிப்பிடப்பட்ட நான்கு வழிச் சாலைக்காக 2.5 கி.மீ நீளமுள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றி வருவதாகவும், நெடுஞ்சாலைகளில் சாலையின் அகலம் குறித்து சில விதிமுறைகள் மற்றும் அளவீடுகள் உள்ளன, இந்த விதிமுறையை மீறிய எந்தவொரு கட்டிடமும் அல்லது கட்டமைப்பும் அகற்றப்படும் என்று கூறினார்.

மேலும், குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்களுக்கு சில மாதங்களுக்கு முன்னர் வெளியேற அறிக்கை வழங்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 115 குடும்பங்களுக்கு ஏற்கனவே கோவைப்புதூரில் மாற்று இடவசதி வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், வீடுகள் ஒதுக்கப்படாதவர்களின் பெயர்கள் தற்போது சேர்க்கப்படும் என்று தமிழக வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....