நீலகிரியில் மழை பாதிப்பு சீரமைப்பு பணிகளுக்கு ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு - மாவட்ட ஆட்சியர்

நீலகிரி: நீலகிரியில் பெய்த தொடர் மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்பு சீரமைப்பு பணிகளுக்கு, அரசு துறைகளுக்கு 82 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

நீலகிரி: நீலகிரியில் பெய்த தொடர் மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்பு சீரமைப்பு பணிகளுக்கு, அரசு துறைகளுக்கு 82 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.



நீலகிரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டதுடன் தடுப்பு சுவர்கள், வீடுகள் இடிந்து விழுந்தன. குறிப்பாக, முத்தோரை பாலாடா, எமரால்டு, அவலாஞ்சி மற்றும் இத்தலார் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்ட நிலையில், 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான விவசாய பயிர்கள் நீரில் மூழ்கின. மேலும், உள்ளாட்சி அமைப்புகள் பராமரிக்கும் உள்ளூர் சாலைகளும் துண்டிக்கப்பட்டு சேதம் அடைந்தன.

பின்னர், மாவட்ட நிர்வாகம் சார்பில், துண்டிக்கப்பட்ட சாலைகளுக்கு பதிலாக, தற்காலிக மாற்று சாலைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும், வீடுகள் இழந்தவர்களுக்கு நிவாரண தொகையும் வழங்கப்பட்டு, இத்தலார் அருகே, தற்காலிக குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. அவை விரைவில் வழங்கப்பட உள்ளன.

இந்நிலையில், மாவட்டத்தில் சேத மதிப்பீட்டை ஆராய்ந்த மாவட்ட நிர்வாகம், தேவையான நிதி வழங்க அரசிடம் கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து மாநில அரசு, 82 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. அதன்படி, நெடுஞ்சாலை துறைக்கு முதற்கட்டமாக, 50 கோடி ரூபாயும் தோட்டக்கலை துறைக்கு, 66 லட்சம் ரூபாய்; உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 1.9 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில், தோட்டக்கலைத் துறையினருக்கு, பயிர்பாதுகாப்பு செய்யப்பட்டிருந்த விவசாயிகளுக்கு, 'இன்சூரன்ஸ்' தொகையும் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், தென்மேற்கு பருவ மழை பாதிப்பை சமாளிக்க, முதற்கட்டமாக, 82 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில், விரைவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதுடன், விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையும் வழங்கப்படும்' என்று கூறினார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...