கோவை: திருவள்ளுவருக்கு மத அடையாளங்களை அணிவித்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜீன் சம்பத்தினை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரி, திராவிடர் தமிழர் கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
கோவை: திருவள்ளுவருக்கு மத அடையாளங்களை அணிவித்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜீன் சம்பத்தினை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரி, திராவிடர் தமிழர் கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
தஞ்சாவூரில் நேற்று திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜீன்சம்பத் காவி துண்டு அணிவித்து, ருட்திராட்சை மற்றும் பட்டை அணிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் அர்ஜீன் சம்பத்தினை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி திராவிடர் தமிழர் கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மேலும், புகார் அளிக்க வந்தவர்கள் திருவள்ளுவர் படங்கள் மற்றும் திருக்குறள் புத்தகத்தோடு வந்து மனு அளித்தனர்.

அனைவருக்கும் பொதுவானவரான திருவள்ளுவருக்கு இந்துமத அடையாளங்களை அர்ஜீன்சம்பத் புகுத்தி, திட்டமிட்டு பதட்டத்தை உருவாக்கும் வகையில் செயல்பட்டிருப்பதாகவும் அக்கட்சியினர் குற்றம்சாட்டிய அவர்கள், அர்ஜீன் சம்பத்தினை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.