வால்பாறையில் பராமரிப்பின்றி இருக்கும் சிறுவர் பூங்கா; நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கோவை: வால்பாறையில் பராமரிக்கப்படாமல் இருக்கும் சிறுவர் பூங்காவை சீரமைப்பதுடன் முட்புதர்களை அகற்றி, சாலைகளை அமைக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை: வால்பாறையில் பராமரிக்கப்படாமல் இருக்கும் சிறுவர் பூங்காவை சீரமைப்பதுடன் முட்புதர்களை அகற்றி, சாலைகளை அமைக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் நகராட்சி சார்பில் 2010ம் ஆண்டு பல லட்சம் செலவில் நகராட்சி சுற்றுலா மாளிகை அருகில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. இந்நிலையில், இப்பூங்கா முறையான பராமரிப்பு இல்லாததால் ஏராளமான முட்புதர்கள் வளர்ந்துள்ளன. இந்த புதர்களில் சிறுத்தைப்புலிகள் தஞ்சமடைந்துள்ளன.

இதனால், அப்பகுதி பொதுமக்கள், குழந்தைகளின் பாதுகாப்பு கருதி யாரும் பூங்காவிற்கு வருவதில்லை. மேலும், பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட விளையாட்டு சாதனங்கள், மின் விளக்குகள், நீர் தொட்டிகள் உடைந்து சேதமடைந்த நிலையில் பூங்காவிற்கு செல்லும் சாலையும் பழுதடைந்துள்ளது.



மேலும், சமூக விரோதிகள் இங்கு மது அருந்தி விட்டு பாட்டில்களை உடைத்து, இங்கேயே வீசி விட்டு செல்கின்றனர். குடித்த டம்ளர்கள் பாட்டில்கள் மட்டுமின்றி ஏராளமான குப்பைகள் சேர்ந்து கிடக்கின்றன. இங்குள்ள நிழற்குடைகள் மாடுகள், ஆடுகள் வளர்க்கும் இடமாக மாறியதோடு கழிப்பறையும் சேதமடைந்து கிடக்கின்றன.

இந்த நிலையில், நகராட்சி நிர்வாகம் பூங்காவை சீரமைப்பதுடன் முட்புதர்களை அகற்றவும், சாலையை பராமரிக்கவும், காவலர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...