நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தில் மசினகுடி வனச்சரகத்தின் ஜகலிகவுடா யானை வழித்தட பகுதியில் ஆண் குட்டி யானை இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தில் மசினகுடி வனச்சரகத்தின் ஜகலிகவுடா யானை வழித்தட பகுதியில் ஆண் குட்டி யானை இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு அருகே யானை வழித்தட பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், தகவலறிந்து விரைந்து வந்த முதுமலை வெளிவட்ட பகுதி, துணை இயக்குனர் ஸ்ரீகாந்த், வனச்சரகர் மாரியப்பன், காந்தன், முரளி ஆகியோர் குட்டி யானையின் உடலை ஆய்வு செய்தனர்.
வனத்துறையினர், வனவிலங்கு ஆர்வலர்கள் முன்னிலையில், மசினகுடி அரசு கால்நடை மருத்துவர் கோச்சலன், யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ஆண் குட்டி யானை இறந்து இரண்டு நாட்கள் இருக்கும் எனவும் பிரசவத்தின்போது விழுந்த போது, தாய் யானை அதனை நிற்க வைப்பதற்காக உதைத்ததில் உடலில் சில இடங்களில் காயம் ஏற்பட்டு, அதன் காரணமாக இறந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறிய அவர்கள், இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிவித்தனர்.