கோவை: கோவையில் சி.பி.எம் அலுவலகத்தில் நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்வில் அக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவை: கோவையில் சி.பி.எம் அலுவலகத்தில் நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்வில் அக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கொடியேற்று விழா நிகழ்வுக்கு பின்னர் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு மக்கள் பிரச்சினைகளை தீர்க்கவில்லை எனவும், 50 ஆண்டுகளில் இல்லாத வேலை இழப்பு, பொருளாதார பிரச்சினைகள் தற்போது ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் மலிவான விளம்பரத்திற்காக வள்ளுவர் சிலைக்கு காவி உடை போர்த்தி இந்து மக்கள் கட்சியை சேர்ந்த அர்ஜுன் சம்பத் அவமானப்படுத்தி இருக்கின்றார் எனவும் அர்ஜூன்சம்பத் மீது சாதாரண வழக்கு போடப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், அர்ஜுன் சம்பத் மீது பொது சொத்துக்கு சேதம் விளைவித்த பிரிவில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்களால் கொல்லப்பட்ட காந்தியை கொண்டாடுகின்றனர், அதேசமயம் பிறப்பால் ஏற்றத்தாழ்வுகளை கூடாது என்ற வள்ளுவருக்கு காவிசாயம் பூசுகின்றனர் என்று குற்றம்சாட்டிய அவர், இழிவான செயலில் சங்பரிவார் அமைப்பினர் ஈடுபடுவதாக கூறினார்.
மத்திய அரசின் கல்வி கொள்கையில் இந்தியை திணிக்கவும், கல்வியை தனியார் மயமாக்கவும் முடிவு செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டிய அவர், திருவள்ளுவருக்கு மதசாயம் பூசுவதும், காவி உடை அணிவித்து திருநீறு பூசுவதும், ருத்ராட்சம் அணிவிப்பது சரியானதல்ல என்று தெரிவித்தார்.
கொடியேற்று விழா நிகழ்வுக்கு பின்னர் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு மக்கள் பிரச்சினைகளை தீர்க்கவில்லை எனவும், 50 ஆண்டுகளில் இல்லாத வேலை இழப்பு, பொருளாதார பிரச்சினைகள் தற்போது ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் மலிவான விளம்பரத்திற்காக வள்ளுவர் சிலைக்கு காவி உடை போர்த்தி இந்து மக்கள் கட்சியை சேர்ந்த அர்ஜுன் சம்பத் அவமானப்படுத்தி இருக்கின்றார் எனவும் அர்ஜூன்சம்பத் மீது சாதாரண வழக்கு போடப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், அர்ஜுன் சம்பத் மீது பொது சொத்துக்கு சேதம் விளைவித்த பிரிவில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்களால் கொல்லப்பட்ட காந்தியை கொண்டாடுகின்றனர், அதேசமயம் பிறப்பால் ஏற்றத்தாழ்வுகளை கூடாது என்ற வள்ளுவருக்கு காவிசாயம் பூசுகின்றனர் என்று குற்றம்சாட்டிய அவர், இழிவான செயலில் சங்பரிவார் அமைப்பினர் ஈடுபடுவதாக கூறினார்.
மத்திய அரசின் கல்வி கொள்கையில் இந்தியை திணிக்கவும், கல்வியை தனியார் மயமாக்கவும் முடிவு செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டிய அவர், திருவள்ளுவருக்கு மதசாயம் பூசுவதும், காவி உடை அணிவித்து திருநீறு பூசுவதும், ருத்ராட்சம் அணிவிப்பது சரியானதல்ல என்று தெரிவித்தார்.