கோவை: "திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்களை விட்டு விட்டு, மரியாதை செலுத்திய அர்ஜுன் சம்பத்தை கைது செய்திருப்பது தவறான செயல்", என பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை: "திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்களை விட்டு விட்டு, மரியாதை செலுத்திய அர்ஜுன் சம்பத்தை கைது செய்திருப்பது தவறான செயல்", என பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, "திருவள்ளுவர் இந்து மதத்தை சேர்ந்தவர் தான் எனவும் திருக்குறள் ஒரு இந்து மத நூல்", என தெரிவித்தார்.
மேலும், திருவள்ளுவர் திருக்குறளில் இந்து மத நம்பிக்கையை அதிகமாக வெளிப்படுத்தியுள்ளார் எனவும் அரசியல் காரணங்களுக்காக திராவிட இயக்கத்தினர் இடையில் திருவள்ளுவரை பயன்படுத்தி வருவதாகவும் கூறிய அவர் பாஜக திருவள்ளுவரை உயர்ந்த நிலையில் வைத்துள்ளது என்றார்.
திருவள்ளுவர் சிலையை அடித்து உதைத்து சேதப்படுத்தி அவமதித்தவர்களை விட்டுவிட்டு, மரியாதை செலுத்திய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தினை கைது செய்திருப்பது தவறான செயல் என குற்றம் சாட்டினர்.
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்வதாகவும் உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் போது இட பங்கீடு உள்ளிட்டவை குறித்து முடிவு செய்யப்படுமெனவும், அவர் கூறினார்.