கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் பின்புறம் உள்ள பகுதியை வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள நிலையில், அப்பகுதியில் இருந்த புங்கை மரம் திடீரென பலத்த சத்தத்துடன் வேரோடு சாய்ந்தது.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் பின்புறம் உள்ள பகுதியை வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள நிலையில், அப்பகுதியில் இருந்த புங்கை மரம் திடீரென பலத்த சத்தத்துடன் வேரோடு சாய்ந்தது.
கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தின் பின்புறம் ஜி.டி. பள்ளியின் சுற்றுச்சுவர் உள்ளது. இந்த பகுதி சில நாட்களுக்கு முன்பு வரை புதர் மண்டி கிடந்த நிலையில், அலுவலகத்திற்கு வரும் வாகனங்களை நிறுத்தும் இடமாக மாற்ற ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் இருந்த புதர்கள் அகற்றப்பட்டு இரு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் பழமையான புங்கை மரம் மற்றும் புளியமரம் உள்ளது.

இந்நிலையில், மாலை சுமார் 6 மணியளவில் இந்த புங்கை மரம் திடீரென பலத்த சத்தத்துடன் வேரோடு சாய்ந்தது. மரம் சாய்ந்த போது அருகில் யாரும் இல்லாததாலும், வாகனங்கள் எதுவும் இல்லாததாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தின் பின்புறம் ஜி.டி. பள்ளியின் சுற்றுச்சுவர் உள்ளது. இந்த பகுதி சில நாட்களுக்கு முன்பு வரை புதர் மண்டி கிடந்த நிலையில், அலுவலகத்திற்கு வரும் வாகனங்களை நிறுத்தும் இடமாக மாற்ற ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் இருந்த புதர்கள் அகற்றப்பட்டு இரு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் பழமையான புங்கை மரம் மற்றும் புளியமரம் உள்ளது.

இந்நிலையில், மாலை சுமார் 6 மணியளவில் இந்த புங்கை மரம் திடீரென பலத்த சத்தத்துடன் வேரோடு சாய்ந்தது. மரம் சாய்ந்த போது அருகில் யாரும் இல்லாததாலும், வாகனங்கள் எதுவும் இல்லாததாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.