கோவை: கோவை சரவணம்பட்டி அருகே அனுமதியின்றி ஆழ்குழாய் கிணறு அமைத்த பேராசிரியர் மற்றும் ஆழ்குழாய் கிணறு அமைத்த கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கோவை: கோவை சரவணம்பட்டி அருகே அனுமதியின்றி ஆழ்குழாய் கிணறு அமைத்த பேராசிரியர் மற்றும் ஆழ்குழாய் கிணறு அமைத்த கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கோவை சரவணம்பட்டி சத்தி சாலையில் பீளமேடு பகுதியைச் சேர்ந்த பேராசிரியர் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமாக இடம் உள்ளது. இந்த இடத்தில் அனுமதியின்றி ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ளதாக மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி சுரேஷ்க்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வுப் பணியை மேற்கொண்டார். இந்த ஆய்வில் அனுமதியின்றி ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. பின்னர், கோவை வடக்கு தாசில்தார் மகேஷ்குமாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். மேலும் ஆழ்குழாய் கிணறு அமைக்க அருகில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து மாவட்ட வருவாய் துறை அதிகாரி, கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அதிகாரிகளை வரவழைத்து அனுமதி இன்றி ஆழ்குழாய் கிணறு அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனடிப்படையில், ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியினை மேற்கொண்ட மகாலட்சுமி கன்ஸ்ட்ரக்சன், ஆழ்குழாய் கிணறு அமைக்கும் இடத்தின் உரிமையாளர் பிரபாகரன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கோவை சரவணம்பட்டி சத்தி சாலையில் பீளமேடு பகுதியைச் சேர்ந்த பேராசிரியர் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமாக இடம் உள்ளது. இந்த இடத்தில் அனுமதியின்றி ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ளதாக மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி சுரேஷ்க்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வுப் பணியை மேற்கொண்டார். இந்த ஆய்வில் அனுமதியின்றி ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. பின்னர், கோவை வடக்கு தாசில்தார் மகேஷ்குமாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். மேலும் ஆழ்குழாய் கிணறு அமைக்க அருகில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து மாவட்ட வருவாய் துறை அதிகாரி, கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அதிகாரிகளை வரவழைத்து அனுமதி இன்றி ஆழ்குழாய் கிணறு அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனடிப்படையில், ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியினை மேற்கொண்ட மகாலட்சுமி கன்ஸ்ட்ரக்சன், ஆழ்குழாய் கிணறு அமைக்கும் இடத்தின் உரிமையாளர் பிரபாகரன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.