நீலகிரி : நீலகிரியில் மலைப்பாதையில் வீசி செல்லும் பிளாஸ்டிக் பொருட்களால் வன விலங்குகளுக்கு ஆபத்து இருப்பதால் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
நீலகிரி : நீலகிரியில் மலைப்பாதையில் வீசி செல்லும் பிளாஸ்டிக் பொருட்களால் வன விலங்குகளுக்கு ஆபத்து இருப்பதால் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மலைப் பாதையில் வீசிச்செல்லும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களால் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வாகனத்தில் பயணிக்கும்போதும், கல்லட்டி போன்ற சாலையில் பயணிக்கும் போதும் தாங்கள் கொண்டு வரக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை வீசி செல்கின்றனர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், வனத்துறை சார்பில் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சுற்றுலா பயணிகள் வன விலங்குகளுக்கு உணவளித்து வருகின்றனர்.

மேலும், உணவு பொருட்களை பிளாஸ்டிக் பைகளுடன் வீசி செல்வதால் அவற்றை உண்ணும் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் பிளாஸ்டிக் பொருட்களை மாவட்டத்திற்குள் கொண்டு வர தடை விதித்துள்ளது. பர்லியார், கல்லார் உள்ளிட்ட பகுதியில் வாகனங்கள் பலத்த சோதனைக்கு பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும், தற்போது குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அதிகளவில் பிளாஸ்டிக் பொருட்கள் காணப்படுகிறது. எனவே வாகனங்களை முறையாக சோதனை மேற்கொள்ள வேண்டும் என வன விலங்கு ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மலைப் பாதையில் வீசிச்செல்லும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களால் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வாகனத்தில் பயணிக்கும்போதும், கல்லட்டி போன்ற சாலையில் பயணிக்கும் போதும் தாங்கள் கொண்டு வரக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை வீசி செல்கின்றனர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், வனத்துறை சார்பில் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சுற்றுலா பயணிகள் வன விலங்குகளுக்கு உணவளித்து வருகின்றனர்.

மேலும், உணவு பொருட்களை பிளாஸ்டிக் பைகளுடன் வீசி செல்வதால் அவற்றை உண்ணும் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் பிளாஸ்டிக் பொருட்களை மாவட்டத்திற்குள் கொண்டு வர தடை விதித்துள்ளது. பர்லியார், கல்லார் உள்ளிட்ட பகுதியில் வாகனங்கள் பலத்த சோதனைக்கு பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும், தற்போது குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அதிகளவில் பிளாஸ்டிக் பொருட்கள் காணப்படுகிறது. எனவே வாகனங்களை முறையாக சோதனை மேற்கொள்ள வேண்டும் என வன விலங்கு ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.