தஞ்சாவூர்: பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு மற்றும் ருத்ராட்ச மாலையை அணிவித்து தீபாராதனை காட்டியும், கற்பூரம் ஏற்றியும் பூஜை செய்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்: பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு மற்றும் ருத்ராட்ச மாலையை அணிவித்து தீபாராதனை காட்டியும், கற்பூரம் ஏற்றியும் பூஜை செய்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளுவர் காவி உடையில் இருப்பது போன்ற படம் தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியானதையடுத்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதை தொடர்ந்து திருவள்ளுவரை மத அடையாளமாக கூடாது எனவும் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், இன்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தஞ்சாவூரில் உள்ள உடையாளூரில் திருவள்ளுவர் சிலைக்கு ருத்ராட்ச மாலையும் காவி துண்டும், நெற்றியில் பட்டையும் அணிவித்து தீபாராதனை காட்டியும், கற்பூரம் ஏற்றியும் பூஜை செய்தார். இதையடுத்து, தஞ்சாவூர் போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
திருவள்ளுவர் காவி உடையில் இருப்பது போன்ற படம் தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியானதையடுத்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதை தொடர்ந்து திருவள்ளுவரை மத அடையாளமாக கூடாது எனவும் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், இன்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தஞ்சாவூரில் உள்ள உடையாளூரில் திருவள்ளுவர் சிலைக்கு ருத்ராட்ச மாலையும் காவி துண்டும், நெற்றியில் பட்டையும் அணிவித்து தீபாராதனை காட்டியும், கற்பூரம் ஏற்றியும் பூஜை செய்தார். இதையடுத்து, தஞ்சாவூர் போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.