கோவை: கோவை சிங்காநல்லூர் காவல் எல்லையில் இருசக்கர வாகனத்தில் தனது உறவினருடன் சென்று கொண்டிருந்த மூதாட்டி திடீரென மயங்கியதையடுத்து, அங்கு பணியில் இருந்த போக்குவரத்து தலைமை காவலர் ஒருவர் மூதாட்டியை கையில் தூக்கிச் சென்று ஆட்டோவில் வைத்து மருத்துவமனைக்கு அனுப்பிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது.
கோவை: கோவை சிங்காநல்லூர் காவல் எல்லையில் இருசக்கர வாகனத்தில் தனது உறவினருடன் சென்று கொண்டிருந்த மூதாட்டி திடீரென மயங்கியதையடுத்து, அங்கு பணியில் இருந்த போக்குவரத்து தலைமை காவலர் ஒருவர் மூதாட்டியை கையில் தூக்கிச் சென்று ஆட்டோவில் வைத்து மருத்துவமனைக்கு அனுப்பிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது.
சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் போக்குவரத்து தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் சண்முகசுந்தரம். இவர் இன்று வழக்கம்போல சிங்காநல்லூர் முக்கிய சாலையில் போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் தனது உறவினருடன் வந்து கொண்டிருந்த மூதாட்டி, சிங்காநல்லூர் சிக்னல் அருகே திடீரென மயக்கம் அடைந்தார். இதையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த உறவினர் நிலை தடுமாறி நின்றார். அப்போது இதைக்கண்ட போக்குவரத்து தலைமை காவலர் சண்முகசுந்தரம் மயங்கிய நிலையில் இருந்த மூதாட்டியைத் தூக்கிச் சென்று ஆட்டோவில் வைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இந்த நிகழ்வை சாலையில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார். பணியில் இருந்த காவலர் ஒருவர் மயக்கமடைந்த மூதாட்டியை மனிதநேயத்துடன் தூக்கிச்சென்று மருத்துவமனைக்கு அனுப்பிய சம்பவம் அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.