திருப்பூர்: திருப்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்ணிற்கு ஏற்பட்ட குளுக்கோஸ் மருந்தில் புழு மற்றும் பஞ்சு போன்ற கிருமிகள் மிதப்பதாக பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்ணிற்கு ஏற்பட்ட குளுக்கோஸ் மருந்தில் புழு மற்றும் பஞ்சு போன்ற கிருமிகள் மிதப்பதாக பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவை சேர்ந்த ஜெகன் (28) என்பவர் தனது மனைவி தேவி (24) என்பவருடன் திருப்பூரில் பழைய ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இவர் கேரளாவைச் சேர்ந்த ஜோசப் என்பவரது உணவகத்தில் குடும்பத்துடன் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், 3 மாதம் கர்ப்பமாக இருந்த தேவிக்கு, ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு குளுக்கோஸ் செலுத்தப்பட்டு வந்தது. அப்போது, சிகிச்சை பெற்று வரும் தேவியை, ஜெகன் சென்று பார்த்த போது, குளுக்கோஸில் புழு மற்றும் பஞ்சு போன்ற கிருமிகள் மிதந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், மொழி பிரச்சனை காரணமாக ஜோசப்பிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர், அங்கு பணியில் இருந்த மருத்துவர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, அலட்சியமாக பதில் அளித்ததாக கூறிய ஜோசப், பொருளாதாரத்தில் பின்தங்கிய பலர், இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை சார்ந்துள்ள நிலையில் அலட்சியமாக மருத்துவம் பார்க்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.
இதனையடுத்து, தேவிக்கு செலுத்தப்பட்டு வந்த குளுக்கோஸ் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மாநகர் நல அலுவலர் பூபதி, அங்கு வைக்கப்பட்டிருந்த மருத்துவ பொருட்களை ஆய்வு செய்தார். பின்னர், அங்கு பணியில் இருந்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் இடமும் விசாரணை மேற்கொண்ட அவர், பாதிக்கப்பட்டவர்களிடம் பேசிய பின்னர் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
கர்ப்பிணி பெண்ணிற்கு செலுத்தப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் கிருமிகள் இருந்ததாக எழுந்த புகாரை அடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஒடிசாவை சேர்ந்த ஜெகன் (28) என்பவர் தனது மனைவி தேவி (24) என்பவருடன் திருப்பூரில் பழைய ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இவர் கேரளாவைச் சேர்ந்த ஜோசப் என்பவரது உணவகத்தில் குடும்பத்துடன் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், 3 மாதம் கர்ப்பமாக இருந்த தேவிக்கு, ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு குளுக்கோஸ் செலுத்தப்பட்டு வந்தது. அப்போது, சிகிச்சை பெற்று வரும் தேவியை, ஜெகன் சென்று பார்த்த போது, குளுக்கோஸில் புழு மற்றும் பஞ்சு போன்ற கிருமிகள் மிதந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், மொழி பிரச்சனை காரணமாக ஜோசப்பிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர், அங்கு பணியில் இருந்த மருத்துவர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, அலட்சியமாக பதில் அளித்ததாக கூறிய ஜோசப், பொருளாதாரத்தில் பின்தங்கிய பலர், இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை சார்ந்துள்ள நிலையில் அலட்சியமாக மருத்துவம் பார்க்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.
இதனையடுத்து, தேவிக்கு செலுத்தப்பட்டு வந்த குளுக்கோஸ் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மாநகர் நல அலுவலர் பூபதி, அங்கு வைக்கப்பட்டிருந்த மருத்துவ பொருட்களை ஆய்வு செய்தார். பின்னர், அங்கு பணியில் இருந்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் இடமும் விசாரணை மேற்கொண்ட அவர், பாதிக்கப்பட்டவர்களிடம் பேசிய பின்னர் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
கர்ப்பிணி பெண்ணிற்கு செலுத்தப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் கிருமிகள் இருந்ததாக எழுந்த புகாரை அடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.