கோவை: கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்களுக்கு பக்கவாதம் (ஸ்ட்ரோக்) குறித்த விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டது.
கோவை: கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்களுக்கு பக்கவாதம் (ஸ்ட்ரோக்) குறித்த விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டது.
பக்கவாத நோயானது மூளைக்கு செல்லும் இரத்த குழாயில் அடைப்பு அல்லது ரத்தக் கசிவு ஏற்படுவதால் உண்டாகிறது. மேலும், இந்த நோய் உருவாக உயர் இரத்த அழுத்தம், சக்கரை நோய், புகைப்பிடித்தல் போன்றவை காரணியாக உள்ளது. இந்த பக்கவாத நோய் ஏற்படும் போது, ஒரு பக்கம் கை கால் செயலிழத்தல், முகம் கோணலாக மாறுவது, திடீரென்று நடப்பதில் தடுமாற்றம், பேச்சு திணறுதல் ஆகியவை அறிகுறிகளாக உள்ளன.
மேலும், இந்த பக்கவாத விழிப்புணர்வு பொதுமக்களிடையே குறைவாக உள்ளதால், இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல, பக்கவாதத்தினால் ஒரு நோயாளி பாதிக்கப்பட்டதில் இருந்து நான்கரை மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு வந்தடைந்தால் உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு நலம் பெறலாம்.

எனவே, யாருக்கேனும் பக்கவாதம் தொடர்பான அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு வந்தால் உரிய சிகிச்சை அளிக்கப்படும். அதேபோல குறிப்பிட்ட நேரத்திற்குள் வருபவர்களுக்கு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிறப்பு சிகிச்சைகள் மூலம் நோயிலிருந்து குணமடையலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் அசோகன் கூறும்போது ;-

கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் கீழ் உள்ள 13 மருத்துவமனைகளில் பக்கவாதம் பாதிப்பினால் உள்ள நோயாளிகள் உடனடியாக கோவை அரசு மருத்துவமனையை தொடர்பு கொண்டு நோயாளியை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கும் பொழுது, இங்கு தயாராக இருக்கும் மருத்துவ குழுவினர் உடனடி சிகிச்சை அளிப்பார்கள். இந்த அதிநவீன பக்கவாத சிகிச்சை மூலம் நோயாளிகள் பயனடைவர்.
அதேபோல, கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 17 நபர்களுக்கு அதிநவீன சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் இருவர் முற்றிலும் குணமடைந்துள்ளனர் என்றும் 3 பேர் பாதியளவில் முன்னேறியுள்ளதாக கூறினார்.