பணிநிரந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் போராட்டம்; 200க்கும் மேற்பட்டோர் கைது

கோவை: பணிநிரந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை டாடாபாத் தமிழ்நாடு மின்வாரிய மண்டல தலைமை அலுவலகம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவை: பணிநிரந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை டாடாபாத் தமிழ்நாடு மின்வாரிய மண்டல தலைமை அலுவலகம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.



தமிழகம் முழுவதும் 8500க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். பணிநிரந்தரம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 1ம் தேதி முதல் மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில், இன்று கோவை டாடாபாத் மின்வாரிய அலுவலகம் முன்பு மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மின் வாரியத்தில் 1998 முன்பு பணியில் சேர்ந்த ஒப்பந்த பணியாளர்களுக்கு கள உதவியாளர் பணி வழங்க வேண்டும், 2008 ம் ஆண்டுக்கு முன்பு ஒப்பந்த பணியில் சேர்ந்தவர்களுக்கு தினக்கூலியாக 380 வழங்க வேண்டும், 2008ம் ஆண்டுக்கு பின்பு ஓப்பந்தபணியாளராக சேர்ந்தவர்களுக்கு கோல்மேன் பணி தேர்வுகள் இல்லாமல் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.



இதனையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மறியல் போராட்டம் காரணமாக மின்வாரிய அலுவலகம் முன்பு ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டு இருந்தனர்.



Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....