அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணிகளுக்காக தமிழகம் முழுவதும் போலீசார் தயார் நிலையில் இருக்க அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் தமிழக டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணிகளுக்காக தமிழகம் முழுவதும் போலீசார் தயார் நிலையில் இருக்க அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் தமிழக டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்பாக அயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளது என்று உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக உத்தர பிரதேசம் மட்டுமன்றி அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழக டிஜிபி திரிபாதி காவல்துறையில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, தேர்தல் சமயத்தில் இருப்பதைப் போன்று தயார்நிலையில் இருக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
மேலும், நவம்பர் 10 தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். மேலும், சட்டம் ஒழுங்கு பணிக்கு வெவ்வேறு இடங்களுக்கு செல்ல தயார் நிலையில் இருக்கும்படியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்பாக அயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளது என்று உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக உத்தர பிரதேசம் மட்டுமன்றி அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழக டிஜிபி திரிபாதி காவல்துறையில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, தேர்தல் சமயத்தில் இருப்பதைப் போன்று தயார்நிலையில் இருக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
மேலும், நவம்பர் 10 தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். மேலும், சட்டம் ஒழுங்கு பணிக்கு வெவ்வேறு இடங்களுக்கு செல்ல தயார் நிலையில் இருக்கும்படியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.