கோவை: மேட்டுப்பாளையம் பவானி ஆற்று வெள்ளத்தால் சுமார் 30,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கோவை: மேட்டுப்பாளையம் பவானி ஆற்று வெள்ளத்தால் சுமார் 30,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை இவ்வாண்டு பருவமழை காரணமாக நிரம்பியதை அடுத்து, அதிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு உபரி தண்ணீரானது பவானி ஆற்றில் வழியே பவானிசாகர் அணையை அடைந்து வருகிறது. மேலும் பவானி சாகர் அணையின் முக்கிய நீராதாரமாக மயாறு போன்றவற்றிலும் தண்ணீர் அதிக அளவில் வருவதால் பவானி சாகர் அணை அதன் முழு கொள்ளவை எட்டியதால் அதன் நீர் தேக்க பகுதியில் தண்ணீரானது தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது.

இதனால் நீர் தேக்க பகுதி கிராமங்களான காந்தவயல், ஆலூர், உளியூர் கிராமத்தை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்த கிராம பகுதிகளை நகரத்துடன் இனைக்கும் லிங்காபுரம் காந்தவயல் உயர் மட்ட பாலம் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்தானது முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், பவானி சாகர் அணை நீர் தேக்க பகுதியில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 30,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தண்ணீர் சூழ்ந்து முழுவதும் தண்ணீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வச்சினம்பாளையம், லிங்காபுரம், திம்மராயம்பாளையம், பழத்தோட்டம் போன்ற பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நேந்திரன், கதிலி உள்ளிட்ட ஏராளமான வாழைகள் தற்போது தண்ணீரில் மூழ்கி மிதக்கின்றன. ஒரு வாழைக்கு சுமார் 120 ரூபாய் வரை செலவு செய்து அறுவடைக்காகக் காத்திருந்த நிலையில், தற்போது அவ்வாழைகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை இவ்வாண்டு பருவமழை காரணமாக நிரம்பியதை அடுத்து, அதிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு உபரி தண்ணீரானது பவானி ஆற்றில் வழியே பவானிசாகர் அணையை அடைந்து வருகிறது. மேலும் பவானி சாகர் அணையின் முக்கிய நீராதாரமாக மயாறு போன்றவற்றிலும் தண்ணீர் அதிக அளவில் வருவதால் பவானி சாகர் அணை அதன் முழு கொள்ளவை எட்டியதால் அதன் நீர் தேக்க பகுதியில் தண்ணீரானது தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது.

இதனால் நீர் தேக்க பகுதி கிராமங்களான காந்தவயல், ஆலூர், உளியூர் கிராமத்தை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்த கிராம பகுதிகளை நகரத்துடன் இனைக்கும் லிங்காபுரம் காந்தவயல் உயர் மட்ட பாலம் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்தானது முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், பவானி சாகர் அணை நீர் தேக்க பகுதியில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 30,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தண்ணீர் சூழ்ந்து முழுவதும் தண்ணீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வச்சினம்பாளையம், லிங்காபுரம், திம்மராயம்பாளையம், பழத்தோட்டம் போன்ற பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நேந்திரன், கதிலி உள்ளிட்ட ஏராளமான வாழைகள் தற்போது தண்ணீரில் மூழ்கி மிதக்கின்றன. ஒரு வாழைக்கு சுமார் 120 ரூபாய் வரை செலவு செய்து அறுவடைக்காகக் காத்திருந்த நிலையில், தற்போது அவ்வாழைகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.