முதுமலை வளர்ப்பு யானைகளுக்கு பருவ மழைக்கு பிந்திய எடை பரிசோதனை

நீலகிரி: முதுமலை வளர்ப்பு யானைகளுக்கு தொரப்பள்ளி வனத்துறை சோதனைச் சாவடியில், பருவமழைக்கு பிந்தைய எடை பரிசோதனையில் மிகவும் சிறிய மற்றும் வயது முதிர்ந்த 14 யானைகளுக்கு எடை பரிசோதனை செய்யப்பட்டது.

நீலகிரி: முதுமலை வளர்ப்பு யானைகளுக்கு தொரப்பள்ளி வனத்துறை சோதனைச் சாவடியில், பருவமழைக்கு பிந்தைய எடை பரிசோதனையில் மிகவும் சிறிய மற்றும் வயது முதிர்ந்த 14 யானைகளுக்கு எடை பரிசோதனை செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு, பாம்பேக்ஸ் மற்றும் ஈட்டி மரம் உள்ளிட்ட மூன்று வளர்ப்பு யானைகள் முகாமில் 27 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எடை பரிசோதனை மேற்கொள்ளப்படுவது வழக்கம்.



இந்நிலையில், தென்மேற்கு பருவமழை நிறைவடைந்ததை அடுத்து பருவமழைக்கு பிந்தைய எடை பரிசோதனை நேற்று தொரப்பள்ளி வனத்துறை சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்டது. இதில் மிகவும் சிறிய மற்றும் வயது முதிர்ந்த 14 யானைகளுக்கு எடை பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் வழக்கம் போலவே, யானைகளின் எடை அதிகரித்து அவற்றின் ஆரோக்கியம் அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக, கடந்த ஜனவரி மாதம் முகாமுக்கு மீண்டும் கொண்டுவரப்பட்ட 13 வயதுள்ள மசினி யானை தற்போது 2640 கிலோ எடை உள்ளதாகவும் முகாமுக்குக் கொண்டு வரப்பட்டபோது, இந்த யானையின் எடை 1900 கிலோவாக இருந்ததாகவும், தற்போது இந்த யானையின் உடல் எடை அதிகரித்து நல்ல ஆரோக்கியமாக இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....