கோவை : சூலூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை : சூலூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்த 25 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் கொடுத்த புகார் அடிப்படையில் சூலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள கணேசனை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக அதே பகுதியை சேர்ந்த நபர்கள் மீது கணேசன் புகார் அளித்துள்ளார். இந்த புகார் அடிப்படையில் மனோஜ், தேவராஜ், சங்கரன் ஆகிய மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்ட கணேசனை கைது செய்யாமல் அவரிடமிருந்து பெற்ற பொய்யான புகாரை பெற்று தங்கள் பகுதியை சேர்ந்த நபர்கள் மீது வழக்கு பதிவு உள்ளதாக குற்றம் சாட்டிய பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர், மாதர் சங்கத்தினருடன் சேர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். மேலும், உடனடியாக கணேசனை கைது செய்ய வேண்டும் எனவும் பொய் வழக்கை திரும்பப்பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்த 25 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் கொடுத்த புகார் அடிப்படையில் சூலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள கணேசனை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக அதே பகுதியை சேர்ந்த நபர்கள் மீது கணேசன் புகார் அளித்துள்ளார். இந்த புகார் அடிப்படையில் மனோஜ், தேவராஜ், சங்கரன் ஆகிய மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்ட கணேசனை கைது செய்யாமல் அவரிடமிருந்து பெற்ற பொய்யான புகாரை பெற்று தங்கள் பகுதியை சேர்ந்த நபர்கள் மீது வழக்கு பதிவு உள்ளதாக குற்றம் சாட்டிய பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர், மாதர் சங்கத்தினருடன் சேர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். மேலும், உடனடியாக கணேசனை கைது செய்ய வேண்டும் எனவும் பொய் வழக்கை திரும்பப்பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.