கோவை : ஆலய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு பட்டா செய்து கொடுக்கவும் தனியாருக்கு விற்கவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளதாகவும் இதனை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி இந்து முன்னணி மாவட்ட தலைவர் தசரதன் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
கோவை : ஆலய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு பட்டா செய்து கொடுக்கவும் தனியாருக்கு விற்கவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளதாகவும் இதனை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி இந்து முன்னணி மாவட்ட தலைவர் தசரதன் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவ்வமைப்பினர் பேசுகையில், தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ஆலயங்கள், ஆலய பராமரிப்பிற்கு வழங்கப்பட்ட இடங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு பட்டா வழங்க தமிழக அரசு ஆணை பிறபித்து உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரத்திலும் மேற்கண்டவாறு கூறியுள்ளது.
ஆலய நிலயங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கே விற்பதற்கு எடுத்துள்ள முடிவை கைவிட்டு, அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூலத்தை திரும்ப பெற வேண்டும் எனவும் இந்து முன்னணியினர் வலியுறுத்தினர்.

இதேபோல, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் 500க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மேலும், தமிழக அரசு இந்த அரசாணையை திரும்பப்பெறாவிட்டால் பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.