கோவை : கோவை அடுத்த வடவள்ளி பகுதியில் உள்ள மயானத்தில் கழிவுகளை கொட்டி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் தமிழ் புலிகள் கட்சி சார்பில் மனு அளித்தனர்.
கோவை : கோவை அடுத்த வடவள்ளி பகுதியில் உள்ள மயானத்தில் கழிவுகளை கொட்டி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் தமிழ் புலிகள் கட்சி சார்பில் மனு அளித்தனர்.
கோவை வடவள்ளி ராஜீவ்காந்தி நகர் பகுதியில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும் இப்பகுதியில் உள்ள மயானத்தில் மாநகராட்சி கழிவுகளை கொட்டி செல்வதால் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சுகாதாரமற்ற நிலையில் கொட்டிக்கிடக்கும் கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ் புலிகள் கட்சியின் வடக்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் வீரா தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.
மேலும், கழிவுகளுடன் கட்டிட கழிவுகளும் கொட்டப்படுவதால் விஷ பிராணிகள் வசிப்பிடமாக மயானம் உள்ளதாகவும் அங்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாக தெரிவித்த அவர்கள், கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
கோவை வடவள்ளி ராஜீவ்காந்தி நகர் பகுதியில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும் இப்பகுதியில் உள்ள மயானத்தில் மாநகராட்சி கழிவுகளை கொட்டி செல்வதால் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சுகாதாரமற்ற நிலையில் கொட்டிக்கிடக்கும் கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ் புலிகள் கட்சியின் வடக்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் வீரா தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.
மேலும், கழிவுகளுடன் கட்டிட கழிவுகளும் கொட்டப்படுவதால் விஷ பிராணிகள் வசிப்பிடமாக மயானம் உள்ளதாகவும் அங்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாக தெரிவித்த அவர்கள், கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.