கோவை : கோவை சூலூர் அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : கோவை சூலூர் அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சூலூர் மதியழகன் நகரைச் சேர்ந்தவர்கள் விக்ரம்(24) மற்றும் சதீஷ்குமார்(23). இவர்கள் இருவரும் பெயிண்டிங் தொழிலில் செய்து வருகின்றனர். இந்த நிலையில், இவர்கள் இருவரும் வழக்கம் போல பணி முடிந்து, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது, சூலூர் பேருந்து நிலையம் எதிரே பல்லடத்தில் இருந்து வந்து கொண்டிருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம், இரண்டு இளைஞர்கள் வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து தகவலறிந்து வந்த சூலூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.