கோவை : கோவை புலியகுளம் புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளியின் தேசிய மாணவர்படை அமைப்பின் மூலம் one cadet - one vision என்ற இலவச கண் பரிசோதனை முகாமை கோவை சங்கரா கண் மருத்துவ மையத்துடன் இணைந்து நடத்தியது.
கோவை : கோவை புலியகுளம் புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளியின் தேசிய மாணவர்படை அமைப்பின் மூலம் one cadet - one vision என்ற இலவச கண் பரிசோதனை முகாமை கோவை சங்கரா கண் மருத்துவ மையத்துடன் இணைந்து நடத்தியது.
இந்த முகாமை பள்ளியின் தாளாளர் ததேயு பால்ராஜ், தேசிய மாணவர் படை கமான்டிங் அதிகாரி லெப்டினட் கர்னல் கிரிஸ் பர்தான் ஆகியோர் தொடங்கிவைத்தனர். சங்கரா கண் மருத்துவ மைய மருத்துவர்களான டாக்டர்.ராம குமார், டாக்டர்.ரிசிக்குப்தா, டாக்டர்.பூஜா குப்தா ஆகியோர் கலந்துக்கொண்டு கண் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு, பரிசோதனை செய்து ஆலோசனை மற்றம் இலவச அறுவை சிகிச்சைக்கும் தோர்வு செய்தனர்.
இந்த முகாமின் சிறப்பு அம்சம் தேசிய மாணவர் படை மாணவர்களும் , மற்றும் பள்ளியில் பயிலும் மாணவர்களுமே கண்குறைபாடு உள்ள வர்களை கண்டுபிடித்து முகாமுக்கு அழைத்து வர வேண்டும் என்பது தான். இளம்வயதிலேயே மாணவர்களுக்கு பெரியவர்களுக்கு உதவ வேண்டும் , சேவை மனப்பாண்மை உள்ளம் கொண்டவர்களாக வளர வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த முகாம் மூன்றாவது ஆண்டாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த முகாமில் பள்ளியின் தலைமையாசிரியை அமலோற்ப்பவ மேரி, ராணுவ வீரர்கள் மூர்த்தி, பல்வான் சிங், மணிகண்டன், மற்றும் ஆசிரிய பெருமக்களும் கலந்துக் கொண்டனர். இந்த முகாமல் 250 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு 20 பேர் இலவச கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த முகாமை பள்ளியின் தேசிய மாணவ படை அலுவலர் ஜி.ஆல்பர்ட் அலெக்ஸ்சாணடர் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த முகாமை பள்ளியின் தாளாளர் ததேயு பால்ராஜ், தேசிய மாணவர் படை கமான்டிங் அதிகாரி லெப்டினட் கர்னல் கிரிஸ் பர்தான் ஆகியோர் தொடங்கிவைத்தனர். சங்கரா கண் மருத்துவ மைய மருத்துவர்களான டாக்டர்.ராம குமார், டாக்டர்.ரிசிக்குப்தா, டாக்டர்.பூஜா குப்தா ஆகியோர் கலந்துக்கொண்டு கண் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு, பரிசோதனை செய்து ஆலோசனை மற்றம் இலவச அறுவை சிகிச்சைக்கும் தோர்வு செய்தனர்.
இந்த முகாமின் சிறப்பு அம்சம் தேசிய மாணவர் படை மாணவர்களும் , மற்றும் பள்ளியில் பயிலும் மாணவர்களுமே கண்குறைபாடு உள்ள வர்களை கண்டுபிடித்து முகாமுக்கு அழைத்து வர வேண்டும் என்பது தான். இளம்வயதிலேயே மாணவர்களுக்கு பெரியவர்களுக்கு உதவ வேண்டும் , சேவை மனப்பாண்மை உள்ளம் கொண்டவர்களாக வளர வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த முகாம் மூன்றாவது ஆண்டாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த முகாமில் பள்ளியின் தலைமையாசிரியை அமலோற்ப்பவ மேரி, ராணுவ வீரர்கள் மூர்த்தி, பல்வான் சிங், மணிகண்டன், மற்றும் ஆசிரிய பெருமக்களும் கலந்துக் கொண்டனர். இந்த முகாமல் 250 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு 20 பேர் இலவச கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த முகாமை பள்ளியின் தேசிய மாணவ படை அலுவலர் ஜி.ஆல்பர்ட் அலெக்ஸ்சாணடர் ஏற்பாடு செய்திருந்தார்.