அரகரா முழக்கத்துடன் மருதமலையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

கோவை : மருதமலை நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரகரா முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.


கோவை : மருதமலை நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரகரா முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழ்க்கடவுன் எனப்போற்றப்படும் முருகனுக்கு உகந்த பண்டிகைகளில் மிக முக்கியமானது கந்த சஷ்டி விழாவாகும். சஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று முருகப்பெருமான் சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி மிகமுக்கியமான நிகழ்ச்சியாகும். இதன் ஒரு பகுதியாக முருகப்பெருமானின் 7வது படைவீடாக கருதப்படும் கோவை மருதமலை சுப்ரமணியசுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.



காளை வாகனத்தில் போர் அலங்காரத்தில் கோவிலை வலம் வந்த முருகப்பெருமான் வேல் ஏந்தி சூர சகோதரர்களை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி மலைக்கோவில் பிரகாரத்தில் நடைபெற்றது. அப்போது குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அரகோரா முழக்கம் எழுப்பி முருகனை வழிபட்டனர்.



இதை தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு சாந்தி பூஜைகள் நடைபெற்றது. இதையும் திரளான பக்தர்கள் கூடி நின்று கண்டு களித்தனர். கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான முருகன் தெய்வானை, வள்ளி திருமண நிகழ்ச்சி நாளை மறுநாள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...