நீலகிரி : நீலகிரியில் கடந்த சில நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் அளவிலான விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி வருவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி : நீலகிரியில் கடந்த சில நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் அளவிலான விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி வருவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட மிளிதேன், எரிசிபெட்டா, இந்திரா நகர், காவிலோரை, வ.உ.சி நகர், குருக்குத்தி, ஓடந்துறை வழியாக நீரோடை செல்கிறது. இதனை நம்பி ஏராளமான விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் காய்கறி விவசாயம் செய்து வருகின்றனர்.
தற்போது நீரோடையில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து, சுருங்கி விட்டதால் கனமழை பெய்யும் போது நீரோடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அதனருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுவது வாடிக்கையாகி விட்டது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை காரணமாக நீரோடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கு பயிரிடப்பட்டு இருந்த பீட்ரூட், கேரட் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது பெய்த கனமழையால் காவிலோரை, சுள்ளிக்கூடு, நெடுகுளா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 35 ஏக்கர் விவசாய நிலங்களும் தண்ணீரில் மூழ்கின.

இதேபோல, முத்தோரை, பாலடா போன்ற பகுதிகளில் 70 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டிருந்த பீட்ரூட், கேரட் உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்து உள்ளன. மழைக்காலங்களில் இதே நிலை தொடர்ந்து நீடிப்பதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் இங்குள்ள நீரோடைகள் தூர்வாரி, நன்கு ஆழப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட மிளிதேன், எரிசிபெட்டா, இந்திரா நகர், காவிலோரை, வ.உ.சி நகர், குருக்குத்தி, ஓடந்துறை வழியாக நீரோடை செல்கிறது. இதனை நம்பி ஏராளமான விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் காய்கறி விவசாயம் செய்து வருகின்றனர்.
தற்போது நீரோடையில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து, சுருங்கி விட்டதால் கனமழை பெய்யும் போது நீரோடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அதனருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுவது வாடிக்கையாகி விட்டது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை காரணமாக நீரோடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கு பயிரிடப்பட்டு இருந்த பீட்ரூட், கேரட் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது பெய்த கனமழையால் காவிலோரை, சுள்ளிக்கூடு, நெடுகுளா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 35 ஏக்கர் விவசாய நிலங்களும் தண்ணீரில் மூழ்கின.

இதேபோல, முத்தோரை, பாலடா போன்ற பகுதிகளில் 70 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டிருந்த பீட்ரூட், கேரட் உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்து உள்ளன. மழைக்காலங்களில் இதே நிலை தொடர்ந்து நீடிப்பதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் இங்குள்ள நீரோடைகள் தூர்வாரி, நன்கு ஆழப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.