வால்பாறையில் ஆட்கள் பற்றாக்குறையால் தேயிலை தோட்டப்பணிகள் பாதிப்பு

கோவை : வால்பாறையில் போதிய மகசூல் இருந்தும், தேயிலை கொழுந்து பறிக்க போதிய ஆட்கள் இல்லாததால் தேயிலை உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை : வால்பாறையில் போதிய மகசூல் இருந்தும், தேயிலை கொழுந்து பறிக்க போதிய ஆட்கள் இல்லாததால் தேயிலை உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் 25 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வந்தனர். பணி ஓய்வு மற்றும் கடுமையான வேலை காரணமாக ஏராளமான தொழிலாளர்கள் திருப்பூர் கோவை மற்றும் சொந்த ஊர்களுக்கு இடம் பெயர்ந்து சென்று விட்டனர். இதனால், தற்போது 25 ஆயிரம் தொழிலாளர்கள் மட்டுமே உள்ளனர். பணி ஓய்வு பெற்றவர்களும் பணியாற்றி வருகின்றனர்.

தேயிலை தோட்ட நிர்வாகத்தினர் கையினால் வெட்டும் கத்திரி, ஒருவர் இயக்கும் மின்சார கத்திரி மற்றும் சிறிய வாகனங்களை பயன்படுத்தி கொழுந்து பறிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனfர். மேலும் ஏஜென்டுகள் மூலம் அஸ்ஸாம், ஜார்கன்ட், பீகா, மத்தியபிரதேசம் போன்ற வட மாநிலங்களிலிருந்து சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டுப் பணி புரிந்து வருகின்றனர்.



கடந்த 2 வாரங்களாக மழையும் வெயிலும் மாறி மாறி அடிப்பதால் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது. ஆனால், போதிய ஆட்கள் இல்லாததால் கொழுந்து பறிக்க இயலாமல் முற்றி உள்ளது. போதிய மகசூல் இருந்தும் ஆட்கள் இல்லாததால் தேயிலை உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....