நவம்பர் 4ல் ஜவுளி பூங்கா அமைப்பது தொடர்பான கருத்தரங்கம் - ஆட்சியர் தலைமையில் நடைபெறுகிறது

கோவை : கோவை மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைப்பது தொடர்பான ஆலோசனை கருத்தரங்கம் வருகிற நவம்பர் 4ம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.

கோவை : கோவை மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைப்பது தொடர்பான ஆலோசனை கருத்தரங்கம் வருகிற நவம்பர் 4ம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்களை அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில் 50 சதவீத அல்லது இரண்டரை கோடி ரூபாய் வரை மானியம் வழங்குவது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதையடுத்து தொழில்துறையினரின் கோரிக்கையை ஏற்று ஜவுளி பூங்கா அமைக்க 10 ஏக்கர் நிலம் வேண்டும் என்பதை 2 ஏக்கராக குறைத்தும் அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனிடையே இது தொடர்பாக ஜவுளித்துறையினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வருகிற நவம்பர் மாதம் 4ம் தேதி கோவையில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் இந்த கருத்தரங்கம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜவுளித்துறையினர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு தங்களுக்கு உள்ள சந்தேகங்களை தெளிவுப்படுத்திக்கொள்வதோடு, கூடுதல் தகவல்களையும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் கேட்டுப்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....