திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் விசைத்தறித் தொழிலாளர்கள் இரண்டு பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் விசைத்தறித் தொழிலாளர்கள் இரண்டு பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மங்கலம் சாலை, அரசங்காடு பகுதியில் அதிவேகமாகச் சென்ற தண்ணீர் லாரியானது இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனம் 10 அடி தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு பைக்கில் சென்ற அம்மாபாளையத்தை சேர்ந்த மணிகண்டன், அசோக் ஆகிய இரண்டு விசைத்தறித் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற பல்லடம் போலீசார், விபத்தில் பலியான இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய தண்ணீர் லாரி ஓட்டுநரை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர். சாலை விபத்தில் இரண்டு விசைத்தறித் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மங்கலம் சாலை, அரசங்காடு பகுதியில் அதிவேகமாகச் சென்ற தண்ணீர் லாரியானது இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனம் 10 அடி தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு பைக்கில் சென்ற அம்மாபாளையத்தை சேர்ந்த மணிகண்டன், அசோக் ஆகிய இரண்டு விசைத்தறித் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற பல்லடம் போலீசார், விபத்தில் பலியான இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய தண்ணீர் லாரி ஓட்டுநரை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர். சாலை விபத்தில் இரண்டு விசைத்தறித் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.