கோவை : பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அதன் முன்னாள் நிர்வாக அறங்காவலர் ஜி வரதராஜின் 83வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஜி.வி. எண்டோவ்மென்ட் ஓரேஷன் (G.V. Endowment Oration) என்ற சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கோவை : பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அதன் முன்னாள் நிர்வாக அறங்காவலர் ஜி வரதராஜின் 83வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஜி.வி. எண்டோவ்மென்ட் ஓரேஷன் (G.V. Endowment Oration) என்ற சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பேசிய பேராசிரியர் மும்பை ஐ.ஐ.டி பேராசிரியர் கே.ராமசுப்பிரமணியன், "பண்டைய இந்தியாவின் அறிவியல்" என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார். மேலும், ஜி வரதராஜ் மற்றும் பி.எஸ்.ஜி நிறுவனங்கள் சமூகத்திற்கு அளித்த பங்களிப்பிற்கு பாராட்டு தெரிவித்தார்.

பண்டைய இந்தியாவின் விஞ்ஞானத்தைப் பற்றி பேசிய அவர், "விஞ்ஞானம் வெளிப்புற உண்மைகளை பரிசோதிப்பது மட்டுமல்லாமல், விஞ்ஞானம் உள் உண்மைகளையும் கையாள்வதாகவும், விஞ்ஞானம் என்பது நம்மைச் சுற்றியுள்ள இயற்கையின் பல்வேறு அம்சங்களை குறிக்கிறது", என்றார்.

மேலும் அவர் கூறுகையில், தற்போதைய கல்வி முறை மற்றும் கருத்து மாற்றப்பட வேண்டும் என்றும் இந்த முறையில் மாணவர்களிடையே குறிப்பிட்ட தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள செய்துள்ளதாக கூறினார். மாணவர்கள் தகவல்களை சேகரித்துப் படிப்பதற்கு பதிலாக, புதிதாக ஒன்றை தெரிந்துகொள்வதில் ஆர்வம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

பி.எஸ்.ஜி ஐடெக் கல்லூரி முதல்வர் பி.வி. மோகன் ராம் மற்றும் பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மைய முதல்வர் எஸ்.ராமலிங்கம் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பேசிய பேராசிரியர் மும்பை ஐ.ஐ.டி பேராசிரியர் கே.ராமசுப்பிரமணியன், "பண்டைய இந்தியாவின் அறிவியல்" என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார். மேலும், ஜி வரதராஜ் மற்றும் பி.எஸ்.ஜி நிறுவனங்கள் சமூகத்திற்கு அளித்த பங்களிப்பிற்கு பாராட்டு தெரிவித்தார்.

பண்டைய இந்தியாவின் விஞ்ஞானத்தைப் பற்றி பேசிய அவர், "விஞ்ஞானம் வெளிப்புற உண்மைகளை பரிசோதிப்பது மட்டுமல்லாமல், விஞ்ஞானம் உள் உண்மைகளையும் கையாள்வதாகவும், விஞ்ஞானம் என்பது நம்மைச் சுற்றியுள்ள இயற்கையின் பல்வேறு அம்சங்களை குறிக்கிறது", என்றார்.

மேலும் அவர் கூறுகையில், தற்போதைய கல்வி முறை மற்றும் கருத்து மாற்றப்பட வேண்டும் என்றும் இந்த முறையில் மாணவர்களிடையே குறிப்பிட்ட தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள செய்துள்ளதாக கூறினார். மாணவர்கள் தகவல்களை சேகரித்துப் படிப்பதற்கு பதிலாக, புதிதாக ஒன்றை தெரிந்துகொள்வதில் ஆர்வம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

பி.எஸ்.ஜி ஐடெக் கல்லூரி முதல்வர் பி.வி. மோகன் ராம் மற்றும் பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மைய முதல்வர் எஸ்.ராமலிங்கம் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.